7 நாளைக்கு எதுவும் பதிவிட கூடாதாம்….
அந்த பள்ளியில் மாபெரும் கொடூரம் நடந்தது, எந்த ஊடகமும் சொல்லவில்லை, ஒரே ஒரு பத்திரிகை மட்டும் உண்மை சொல்லிற்று
அதனைத்தான் நாமும் சொன்னோம், அதற்குள் இவன் கலவரதை தூண்டுகின்றான், பள்ளி பெயரை கொடுக்கின்றான், இவன் சமூக விரோதி இவன் எழுத்துக்களை அனுமதிக்காதீர் என எவனோ மார்க்குக்கு பிராது கொடுத்துவிட்டான்
மார்க்கும் நீ இன்னும் 7 நாளைக்கு எதுவும் பதிவிட கூடாது, யார் கிட்டேயும் பழக கூடாது , உன்ன 7 நாள் தள்ளி வைக்கிறேன்டா, இது நாட்டாமையோட தீர்ப்புடா என துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பிவிட்டார்
இன்னும் 7 நாள் எதுவும் பதிவிட முடியாதாம், சொல்லிவிட்டார்கள்
இந்த உலகம் எப்படியும் போகட்டும், அரசியலில் எதுவும் நடக்கட்டும். எந்த வரலாற்று தினமும் அதன் சிறப்பை உணராமல் கடக்கட்டும், எது எப்படி போனாலும் சிக்கல் இல்லை
ஆனால் தங்க தலைவியின் சங்கத்தை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதால் வேறு வழியில் பதிவினை தொடர்ந்தே ஆகவேண்டும்
ஆதலால் என் இனிய நண்பர்களே, உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக இன்னொரு ஐடியில் இருந்து பதிவிடுகின்றேன்
ஆனாலும் இத்தேசத்தில் இந்துக்களை பற்றி எழுதலாம், இஸ்லாமியரை பற்றி கூட எழுதலாம் ஆனால் கிறிஸ்தவ அழிச்சாட்டியங்களை எழுதமுடியவில்லை பார்த்தீர்களா?
அப்படியானால் எந்த அளவு அவர்கள் ரகசியமாக வியாபித்திருக்கின்றார்கள் என்பதை உணரலாம்
இவர்கள் நல்ல கிறிஸ்தவர்களும் இல்லை, நல்ல இந்தியர்களுமில்லை , கொஞ்சமும் நியாயம் உணராத, கொஞ்சமும் பிஞ்சுகளின் வலியறியாத, கொஞ்சமும் சகிப்பு தன்மை இல்லாத இவர்களால் இந்த சமூகத்தில் மாபெரும் குழப்பம் ஏற்படும் என்பது மட்டும் புரிகின்றது.