7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம்

பழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு

ஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்?

மத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும்

பின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும்

எனினும் இந்த விவகாரம் ஒரு ரவுண்டு வந்துவிட்டுத்தான் ஓயும்

இப்பொழுது இன உணவாளர்கள் எல்லாம் பொங்குவார்கள், ஆனால் எதற்கெடுத்தாலும் கைது, மிதி, அடி என இருப்பதால் கொஞ்சம் யோசித்து முணங்குவார்கள்

அவர்கள் வருத்தம் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?

இப்பொழுது கலைஞர் முதல்வராக இருந்தால் எவ்வளவு அரசியல் செய்யலாம், குதிக்கலாம், துள்ளலாம், பொங்கலாம்

ஆனால் இந்த பழனிச்சாமி அல்லவா அமர்ந்துவிட்டார் ஐயகோ எல்லாம் வீணாயிற்றே….