8 வயது குழந்தை அது எனும்பொழுதே நெஞ்சு பதைபதைக்கின்றது
பல இனங்கள் கலந்து வாழும் நகரங்களில் ஒருவிதமான கொடூர மனித மிருகங்கள் உருவாகும். எல்லா இனத்தின் கொடூர குணங்களை மட்டும் பொறுக்கி எடுத்து வரும் அந்த கூட்டம் மகா மகா கொடுமையானதாக இருக்கும்
அந்நகரத்து இயல்பும் அவைகளுக்கு சாதகமாகின்றன
இது உலகின் எல்லா நகரங்களிலும் இருக்கின்றது என்றாலும் டெல்லியில் உச்சகட்ட மிருகங்கள் சில வாழ்கின்றன என்பது நிர்பயா விவகாரத்திலே தெரிந்தது
இப்பொழுது இன்னும் மோசமாயிருக்கின்றது , பிஞ்சு குழந்தைகளை கசக்கி எறிந்திருக்கின்றார்கள் அதுவும் கூட்டாக
8 வயது குழந்தை அது எனும்பொழுதே நெஞ்சு பதைபதைக்கின்றது
சென்னையில் நடந்த ஹாசினி சம்பவத்திற்கு கொஞ்சமும் குறைவில்லா கொடுமை அது
பாலியல் கொடூரங்கள் இப்பொழுதுதான் நடக்கின்றதா என்றால் இல்லை, நெருங்கமுடியா இடத்தில் இருப்பவர்கள் துணையோடு இப்படி மிருகங்கள் ஆட்டம் போடுவது அன்றிலிருந்தே நடப்பது
நாயகன் படத்தில் கூட ஒரு டிஎஸ்பி வந்து வேலுநாயக்கரிடம் புலம்பும் காட்சி அதனை தெளிவாக சொல்லும்
ஆனால் இப்பொழுது பிஞ்சு குழந்தைகள் பக்கம் திரும்பும்பொழுதுதான் அந்த மிருகங்கள் மனநோயாளிகள் என்பதும் அவர்கள் கொல்லபட்டே தீரவேண்டும் என்பதும் எல்லோர் சொல்லும் முடிவாக வருகின்றது
சாத்தானே நடுங்கும் அந்த பாதகத்தை செய்தவர்களை தண்டித்தே தீரவேண்டும், அவர்கள் வாழ்வதில் இனி அர்த்தமில்லை
டெல்லியில் மக்கள் போராட தொடங்கிவிட்டனர். இதில் ராகுல்காந்தியும் தன் சகோதரியோடு கலந்திருக்கின்றார்
அரசியலுக்காக அல்ல இந்திய பெண் குழந்தைகளுக்காக வந்திருக்கின்றேன் என சொல்லி மக்கள் மனதில் உயர்கின்றார் ராகுல்
(வேறு எந்த அரசியல்வாதியும் அப்பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது)
அவரை பப்பு என்பார்கள், குழந்தை என்பார்கள் சில பதர்கள்
ஆனால் குழந்தையின் வலி உணர்ந்த தலைவனாக அவர் வந்துநிற்பது அவர்மேல் மரியாதையினை கூட்டுகின்றது
அவரின் கொள்ளுதாத்தா நேரு அன்று குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடியதும், அவர்களை மனமார நேசித்த காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன
அவரின் தந்தை கூட எப்படி இறந்தார்?
அந்த சண்டாளி தனு மாலை போட அனுமதிக்கபடவில்லை, ராஜிவ் வேகமாக மேடைக்கு சென்றார், வழியில் ஒரு சிறுமி கவிதை வாசிக்க வந்தது
நேருவின் வம்சமல்லவா? அந்த பெருமகன் அக்குழந்தையின் கவிதையினை நின்று காதுகொடுத்து கேட்டு புன்னகைத்த பொழுதுதான் சண்டாளி உள்ளே நுழைந்து வெடித்தாள்
அந்த குடும்பத்து வாரிசுகள் இன்று குழந்தைகளுக்காக வந்து நிற்கும்பொழுது மனமார அவர்களை வாழ்த்த தோன்றுகின்றது
இந்த சம்பவங்கள் இதுவே கடைசியாகட்டும்
இக்குழந்தைகள் பெயரில் கடும் சட்டம் இயற்ற படட்டும், கொடும் பாதகம் செய்த அவர்கள் சட்டத்தின் எந்த ஓட்டையிலும் தப்பாதபடி , சிக்கி சாகும்படி கடுமையான சட்டம் வரட்டும்
இக்குழந்தைகள் அச்சட்டத்தின் பெயரில் வாழட்டும், இனி வரும் குழந்தைகளை காக்கட்டும்
ராகுல் மாபெரும் வழியினை காட்டியிருக்கின்றார்
இப்படி மாநிலமெங்கும் அதன் தொண்டர்களும் தலைவர்களும் களத்திற்குவந்தால் மாபெரும் மாற்றம் விளையும்
பெண் குழந்தைகள் சிரிக்கும் தெய்வங்கள், அவர்களை சிரிக்க வைத்து பாதுகாக்கும் வீடும் நாடுமே உருப்படும் வாழும்
இங்கு குழந்தைகள் பாதுகாப்பாக மகிழ்வாக வாழ வாழத்தான் தெய்வங்கள் நம்மோடு வாழும்
இனி ஒரு பெண் குழந்தையும் கண்ணீர் சிந்த விடோம், அப்படி காக்காவிட்டால் இவ்வளவு இந்தியர்கள் இருப்பதில் அர்த்தமே இல்லை
அந்த போராட்ட களத்தில் ராகுலையும் பிரியங்காவினையும் காணும்பொழுது நேருவும் ராஜிவும் சாகவில்லை நம்மோடு இருக்கின்றார்கள், நிச்சயம் இத்தேசத்தை காப்பார்கள் எனும் நம்பிக்கை பிறக்கின்றது