எட்டு மாதத்தில் மூன்றாம் முதல்வர் !!!

ஜெயலலிதா எனும் ஒருவருக்குத்தான் தமிழக மக்கள் அந்த பெரும் ஆதரவினை அளித்து பெரும் வெற்றி கொடுத்தார்கள்

அவர் இல்லா இடத்தில் இன்னொரு தேர்தல் வைப்பதுதான் முறையாகுமே ஒழிய, அவர் இடத்தில் ஒருவர் முகமூடி போட்டு அமர்வது சரி ஆகாது.

கடந்த 8 மாதத்தில் 3ம் முதல்வரை பார்க்கபோகின்றதாம் தமிழகம்

8 மாதத்திலே 3 முறை என்றால், இன்னும் 4 ஆண்டுகளில் எத்தனை முதல்வரை பார்ப்போமோ தெரியாது

சசிகலா மீதும் வழக்குகள் உண்டு, நாளையே தீர்ப்பு என்றால் இன்னொரு தற்காலிக முதல்வர் வருவார், இந்த கொடுமைகள் எல்லாம் ஏன்?

ஆக இன்றைய தமிழக தேவை மறுதேர்தலே அன்றி, இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் அல்ல.

அப்படி தேர்தலில் சசிகலாவினை மக்கள் ஏற்றுகொண்டுவிட்டால் யார் என்ன செய்யமுடியும்? தலைவிதி என சொல்லிவிட்டு நகர வேண்டியதுதான்.

அது இருக்கட்டும், இப்போதைய சூழல் எதனை சொல்கின்றது?

முன்பே அறிஞர்கள் சொல்வார்கள்

நாட்டின் தலைவிதியினை பொறுத்தே தலைவர்கள் வருவார்கள், நல்ல விதி இருந்தால் நல்ல தலைவர்கள் வரவும், அழிந்துவிடும் விதி இருந்தால் ஆகாத தலைவர்கள் உருவாக சூழ்நிலை வழிவகுக்கும் என்பார்கள்

தமிழக சூழல் எப்படி உருவாகியிருக்கின்றது என நோக்கும்பொழுது அதன் சாபம் தீரும் நாள் வெகுதொலைவில் இருப்பது தெரிகின்றது.


 முதல்வராகும் சசிகலாவிற்க்கு கி.வீரமணி வரவேற்பு

முந்தி முந்தி வீரமணி இப்படித்தான், ஆட்சிக்கு நாளை தமிழிசையே வந்தாலும் ஓடிசென்று காலில் விழுவார்.

பெரியார் சொத்துக்களை காப்பது என்றால் சும்மாவா?