131 ஓநாய்கள் எங்கே ??? இன்னும் பிற….

டேய்….. 131 பேரையும் இனி ஏதாவது கரகாட்டகாரியோ, அந்த ஹோட்டல் முதலாளியோ கட்டுபாட்டில் எடுத்து ஆட்சி அமைத்து விடாமல் பார்த்துகொள்ளுங்கள்.

சுற்றி நிற்கும் ரவுடிகளில் கூட ஒருவன் முதல்வராகிவிடும் ஆபத்து இருக்கின்றது.


வைகோ சத்தமே இல்லை, முன்பு பாண்டவர் அணி, அது இது என தேர்தல் காலத்தில் சொல்லிகொண்டிருந்தார்.

இப்பொழுது பாஞ்சாலி, சீதை, மண்டோதரி என பேச தயார் செய்துகொண்டிருப்பாரோ?

ஸ்டெர்லைட், ராஜிவ் கொலையாளிகள் என பல வழக்கிற்காக கோர்ட்டுக்கு சென்ற வைகோ, 131 எம் எல் ஏக்களை காணவில்லை என்பதற்கு கோர்ட் என்ன போலிஸ் ஸ்டேஷன் கூட செல்லவில்லை

ஒரு வகையில் அவர் தீர்க்கதிரிசி

ஒருவேளை கோவில்பட்டியில் நின்று ஜெயித்திருந்தால் இந்நேரம் 131 பேரில் ஒருவராக அல்லவா பட்டாபட்டி டவுசரோடு அமர்ந்திருப்பார்.

அதினின்று தப்பிய அதிர்ச்சியில் இருக்கின்றார் போல….


சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் மணிவண்ணன்

எம் எல் ஏக்களை யாரும் கடத்தவில்லை, அவர்கள் சுதந்திரமாக , உல்லாசமாக இருக்கின்றனர் : வளர்மதி மற்றும் மா.பா பாண்டிராஜன்

டேய்..என்னடா நடக்குது அங்க?

அவன் மனைவியினை காணவில்லை என அழுது , கொண்டிருக்கின்றான்,

இவர்கள் எல்லோரும் உல்லாசமாக இருக்கின்றார்கள், மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.

தூ.. என்ன கருமமோ போங்கடா…!


சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு விழாவிற்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ்.

வாபஸ் வாங்கிய போலிசார் எங்கே சென்றார்கள்?

சாம,பேத,தான முறைகளில் முயற்சித்துவிட்ட சசிகலாவிற்கு அடுத்து இருக்கும் வாய்ப்பு தண்ட முறை என்பது காவல்துறைக்கே புரிந்து, பாதுகாப்பினை தமிழகம் முழுக்க பலபடுத்த போகின்றார்களோ?


 கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போவார்கள் : நாஞ்சில் சம்பத் சாபம்

பன்னீர் இன்றும் அதிமுககாரராகவே களத்தில் நிற்கின்றார், போராடுகின்றார். இது துரோகம் ஆகவே ஆகாது

ஆனால் முதலில் கலைஞருக்கும், வைகோவிற்கும் நாஞ்சில் சம்பத் செய்தது என்ன? இன்று ஜெயலலிதாவிற்கு செய்து கொண்டிருப்பது என்ன?

மூன்று துரோகம் அல்லவா? இவரெல்லாம் துரோகம் பற்றி பேசுகின்றாராம்,

ஒரு வேளை வைகோ இன்னும் அமைதியாக இருப்பதை பார்த்து அவரை எச்சரித்திருப்பாரோ???

வைகோவினையும் காணவில்லை, ஒருவேளை அந்த 131 பேரில் ஒருவராக அமர்ந்திருப்பாரோ என்னமோ?