எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் உச்சகட்ட உளறல்

ஒரு உச்சகட்ட உளறல் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த எஸ்ரா சற்குணம் என்ற ஆயரின் சமீபத்திய சர்ச்சை பேச்சுதான் சாட்சி

மனிதர் திருப்பலியில் ஒயின் குடித்தாரா? இல்லை டாஸ்மாக் சரக்கினை ஊற்றி வைத்துவிட்டு பேட்டிக்கு அழைத்தார்களா என தெரியவில்லை, அப்படி ஒரு அபத்தம்

இவர் ஆயரோ, மேய்ப்பரோ அது தேவையில்லை, ஆனால் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த இந்தியகுடிமகன், இந்நாட்டு வரலாறு அவசியம் அவர் படித்திருக்கவேண்டும்

இந்தியாவில் மொகலாயர் நல்லாட்சி நடத்தினர், ஆங்கிலேயர் நல்லாட்சி நடத்தினர் என அப்படி அபத்தமான உளரல்

மொகலாயர் நலலாட்சி நடத்தினால் ஏன் சிவாஜியும், நாயக்கர் அரசும் எழும்பபோகின்றது? கிழக்கிந்திய கம்பெனி நடத்திய அராஜகத்தை கண்டே பிரிட்டன் அரசு இந்தியாவினை கையகபடுத்தியது, அதன் ஆட்சி வெறும் 90 ஆண்டுகளே

இந்தியாவில் எப்பொழுதும் அந்நியருக்கெதிரான ஒரு எதிர்ப்பு இருந்துகொண்டே இருந்தது, எந்த அந்நியனும் அமைதியாக ஆளவில்லை. ஆளவும் முடியாது

அப்படியும் பென்னிகுயிக், ஐடா ஸ்கேடர் போன்ற மிஷினரிகளை பற்றி சொன்னாரா என்றால் அதுவுமில்லை. அதனைத்தான் ஆயர் சொல்லியிருக்கவேண்டும்

இந்த ஆயர் சுத்தமாக சரியில்லை, நாட்டுபற்று இல்லாத, இந்திய வரலாறு தெரியாத எந்த மத தலைவனும் இம்மண்ணிற்கு தேவையில்லை

இனி இந்த ஆயர் இப்படி எல்லாம் உளறலாமலிருக்க, அவர் திருப்பலி மட்டும் வைத்துவிட்டு சும்மா இருக்கும்படி கிறிஸ்தவர்கள் சார்பாக கேட்டுகொள்கின்றோம்

அவர் வாயினை மூடி இருப்பதை விட கிறிஸ்தவத்திற்கு பெரும் உதவி செய்யமுடியாது,

இது இருக்கட்டும்

கமலஹாசன் எது செய்தாலும் இந்துமதத்தினை கேவலபடுத்துகின்றார் என பொங்குபவர்களுக்கு “செந்தூரா..செந்தூரா” என ஒரு பாடல் வந்திருப்பது தெரியவில்லை போலும்

சிகப்பான, செந்தூரமான ஊர் செந்தூர், அது திருசெந்தூர் என அழைக்கபட காரணமும் அதுவே, தேரிகாட்டு முருகனுக்கு செந்தூரன் என பெயர்,

கொஞ்ச நாளாக “செந்தூரா.. தூரா..தூ” என ஒரு பெண்குரலில் ஒரு பாட்டு ஒலிக்கும் பொழுதெல்லாம் இது ஏதோ முருகன் பாடல் என நினைத்ததுண்டு, இப்பொழுதுதான் தெரிந்தது அது சினிமாபாடலாம்

முருகனை குறிக்கும் சொல்லை , இப்படி “தூரா, தூரா.தூ” என ஒரு பெண் உச்சஸ்தானியில் பாடி கேவலபடுத்துகின்றார், ஒரு எதிர்ப்புமில்லை. ஒரு சத்தமுமில்லை

இதே கமலஹாசன் படத்தில் ஒரு பெண் “செந்தூரா” என அவரை நோக்கி பாடியிருந்தால் விடுவார்களா? இந்நேரம் வேலினை தூக்கிகொண்டு சூழ்ந்திருப்பார்கள்

ஆக இவர்களுக்கு இந்துகடவுள்கள் பற்றிய அறிவினையும், உணர்ச்சியினையும்
கொடுக்க கமலஹாசன் தான் தேவைபடுகின்றார்

ஏ காவி கும்பல்களே, இனியாவது அவரை புரிந்துகொள்ளுங்கள். இந்த செந்தூரா …. எனும் ஒப்பாரிக்கு முணுமுணுப்பாவது கொடுங்கள்

முப்பாட்டன் முருகனை “செந்தூரா….தூரா” என சினிமா பாடலில் பாடுவதை அங்கிள் சைமன் எப்படி பொறுத்துகொண்டார்?

அதானே, சினிமாக்காரர்களை என்றைக்கு அங்கிள் கண்டித்தார்?


கேரள முதல்வருடன் வை.கோ சந்திப்பு

எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபிக்கு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமோ, அங்கெல்லாம் அன்னார் செல்வார் என்பது தெளிவாக புரியும் இன்னொரு நேரமிது

ஆர்எஸ்எஸ் Vs விஜயன் சர்ச்சை முற்றி நிற்க இவர் ஏன் இப்பொழுது அங்கு செல்லவேண்டும்? நியூட்ரினோ பற்றி பேசபோனாராம். அத்திட்டம் என்ன நேற்று நள்ளிரவில் அறிவிக்கபட்டதா?

இருந்து பாருங்கள், சில நாட்களில் முல்லைபெரியாறு, சிறுவாணி என அணை சர்ச்சைகள் வந்தாலும் வரலாம்

அப்படி வரும் பட்சத்தில் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.