தமிழக மீனவர் மீது நடக்கும் துப்பாக்கி சூடு
சிலர் உண்மையில் பைத்தியமா? , இல்லை தங்களை வெகு சாமாத்தியசாலிகளாக நினைக்கின்றார்களா? என்பது தெரியவில்லை
அதாவது பிரபாகரன் இருந்தவரை தமிழக மீணவர்களை சிங்களன் சுடவில்லையாம், அவர் செத்ததும் சுடுகின்றானாம்
1980களில் இருந்து புலிகளுக்கு பொருட்கள் கடத்துகின்றார்கள் என சுட தொடங்கினான் சிங்களன், அமைதிபடை இருந்த காலங்களில் மட்டும் அது அடங்கியிருந்தது
1991க்கு பின் அது தொடங்கிற்று, அடிக்கடி சுட்டுகொண்டே தான் இருந்தான், இதில் பிரபாகரன் இருக்கும்வரை சிங்களன் சுடவே இல்லை என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று
ஏன் இப்படி அளந்து விடுகின்றார்கள்?
காரணம் பிரபாகரனே அப்படி அளந்துவிட்டவன் தான்
அவன் சொன்னானா? இல்லை அவனிடம் கதைகேட்ட சாமியார் கஸ்பர் கப்சா விட்டானா? என்பது தெரியாது, ஆனால் பிராடு சாமி கஸ்பர் கதைவிட்டது இப்படித்தான்
“பாதர், நாங்கள் மட்டும் இல்லையெண்டால் சிங்களம் இலங்கையில ஒரு தமிழனையும் விடாம கொன்னுரும், நாங்க இருக்கதுனால அவன் அமைதியா பயந்து இருக்கான்”
பிரபாகரன் கைலாசம் போய் கிட்டதட்ட 8 வருடம் ஆகின்றது, இலங்கையில் ஏதும் பெரும் கலவரம் அதன் பின் நடந்ததாக யாராவது சொல்லமுடியுமா?
இல்லை, ஆனால் சிங்களன் அதே பலத்தோடுதான் இருக்கின்றான், ஆனால் பெரும் கலவரம் எல்லாம் நடக்கவில்லை
பிரபாகரன் அள்ளிவிட்டது ஒரு கதை என்றால், இன்று இந்த அடிப்பொடிகள் அள்ளிவிடுவது அதனை விட பெரும் பொய்
உண்மையினை பேசிவிடவே கூடாது என சத்தியம் செய்திருப்பார்கள் போல..