“என்னை கை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் பங்குபெற்றது கஸ்தூரி…
தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும் : கமலஹாசன்
50 வருடமாக அதுதானே நடந்துகொண்டிருக்கின்றது, எல்லா தேசிய கட்சிகளும் திராவிடத்தை ஏற்றுதான் கூட்டணி வைக்கின்றன
திராவிடத்தை ஏற்காத எந்த தேசியகட்சியும் இங்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை, இது தமிழக எதார்த்தம்
டோண்ட் வொரி கமலஹாசன்..
ஒரு ஹீரோ என்னை அடிக்கடி சீண்டிகொண்டே இருந்தார், அவரால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் , பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் சினிமாவில் காலம் காலமாக நடக்கின்றன, நானும் பாதிக்கபட்டேன் : நடிகை கஸ்தூரி
ஆக இன்றைய “என்னை கை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் பங்குபெற்றது கஸ்தூரி…
விடாமல் தொடர்ந்து யாரவது ஒருவர் பங்குபெற்றுகொண்டே இருக்கின்றார்கள், நிகழ்ச்சி பல எபிசோடுகளை தாண்டி செல்லும் போல் இருக்கின்றது..