விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை….

 

விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: : ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்

காவேரி டெல்டா பொய்க்கும்பொழுதே இனி இலவச அரிசி சாத்தியமில்லை என யூகிக்கமுடிந்தது, அது நடந்தும் விட்டது

கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என சொன்னான் பாரதி, கோதுமை கிடைத்துவிட்டது கொடுக்கத்தான் நம்மிடம் வெற்றிலை இல்லை, வெற்றிலை கொடுக்க காவேரியே இல்லை..

அரிசியினை வைத்து ஆட்சியினை பிடித்த கழக ஆட்சியில் தமிழக அரிசி உற்பத்தி சரிந்து, வடநாட்டு கோதுமை கொடுக்கின்றார்கள் என்பது பெரும் கொடுமை, அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன் அரிசியினை வைத்து ஆட்சி பிடித்த கழகங்கள், இன்று அதே அரிசியினை விளைச்சலை ஒழித்துவிட்டு கோதுமையினை விற்கவந்திருப்பது எதனை காட்டுகின்றது?

அரிசி வைத்து ஆட்சிபிடித்தார்களே ஒழிய, அரிசி விளைவிக்கும் திட்டம் ஒன்று கூட அவர்களிடம் இல்லை என்பதை காட்டுகின்றது,

இந்தி திணிப்பினை அடுத்து கோதுமை திணிப்பு நடத்தபடுகின்றது என யாராவது கிளம்புவார்களா?

தமிழனின் உணவினை அழித்து வடநாட்டு கோதுமையினை திணிக்கும் மத்திய அரசு ஒழிக என யாராவது கொடிபிடிப்பார்களா? என தெரியவில்லை…

ஆனாலும் இதற்கெல்லாம் அசந்துபோவதில்லை கழகங்கள், நாளையே கோதுமை கொடுத்த அரசு, அரிசி கொடுக்கமுடியா அரசு என பிரச்சினை வந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?, இப்படி பிரச்சாரம் நடக்கும்

“தமிழர்களே, இது என்ன பிரச்சினை? பஞ்சாப் கோதுமையினை ரேஷனில் வழங்கும்பொழுது, பாசுமதி அரிசி கொடுக்க முடியாதா?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு 3 கிலோ பாசுமதி அரிசி கொடுப்போம் என தெரிவிக்கின்றோம் , கூடவே 10 ரூபாய்க்கு விலையில்லா பிராய்லர் கொடுக்கும் திட்டமும் உண்டு

எனவே நீங்கள் தினமும் சிக்கன் பிரியாணி உண்ணலாம்,

தமிழக பெருமக்களே வோட்டு எங்களுக்கு, முட்டை பிரியாணி உங்களுக்கு”


தேர்தல் முடிவுகள் மோசமாக அமையவில்லை: ராகுல் காந்தி

ஆமாம், மோசமாக அமையவேயில்லை, படு மோசமாகத்தான் அமைந்தது.