மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு……
மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும் – மத்திய அரசிற்கு சீமான் வலியுறுத்தல்
இதுவே காங்கிரஸ் ஆட்சியென்றால், தமிழனை டெல்லி கொல்கின்றது என குதியோ குதிப்பார், கலைஞர் ஆட்சி என்றால் அய்யய்யோ கலைஞரின் தமிழின துரோகம் பாரீர், தமிழனை காக்கமுடியாத பதவி அவருக்கு எதற்கு என பொங்குவார்
ஆனால் பாஜக அரசு என்றால் மத்திய அரசு என்பதோடு நிறுத்திகொள்வார், அதிமுக அரசு என்றால் மாநில அரசு, மாநில முதல்வர் என முணகுவதோடு சரி
இதனைத்தான் அங்கிள் சைமனின் தமிழுணர்வு என அவரின் அடிப்பொடிகள் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்..
சாதிய பாகுபாடற்ற இந்தியா வேண்டுமாம், அன்னல் அம்பேத்கர் கண்ட இந்தியா வேண்டுமாம், அன்னார் சொல்கின்றார்
பின் ஏன் பெரியார் தமிழர் அல்ல என இவர்கள் சொல்கின்றார்கள்?,
சாதிவாரியாக அன்றி தமிழனை அடையாளம் காணமுடியாது என சொல்வதும் இவர்களே, சாதி இல்லா இந்திய தேசியம் வேண்டும் என சொல்வதும் இவர்களே
பெரியார் தமிழின துரோகி என்பதும், பின் சாதி இல்லா இந்திய சமுதாயம் வேண்டும் என்பதும் என்ன வகை?
ஏதாவது புரிகின்றதா?
இதுதான் அங்கிள் சைமனின் “தமிழ் தேசியம்”, அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைனில் அதற்கு விளக்கம் சொல்லபடும்.