மாணவர் முத்துகிருஷ்ணனின் அஞ்சலிக்கு சென்ற பொன்னார் மீது செருப்பு வீச்சு…

Image may contain: 1 person, close-up

மாணவர் முத்துகிருஷ்ணனின் அஞ்சலிக்கு சென்ற பொன்னார் மீது செருப்பு வீசபட்டிருக்கின்றது

இது கண்டிக்க கூடிய விஷயம், சரியான ஆதாரம் இருப்பின் எறிந்தவரை தண்டிக்கவும் செய்யலாம்

என்ன இருந்தாலும் அவர் ஒரு அமைச்சர், அதுவும் தேசிய கட்சியின் அமைச்சர். திருமணம் கூட செய்யாமல் இந்நாட்டிற்காக வாழும் ஒரு மனிதர்

அவர் கட்சி மீது சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் இந்த தேசத்தை தொடர்ந்து வாழும் வாய்ப்பினை அவர்களுக்குத்தான் இந்த தேசம் கொடுத்து வருகின்றது, அக்கட்சி அவரையும் அங்கீகரித்திருக்கின்றது

முத்து கிருஷ்ணன் ஏன் இறந்தான் தெரியாது, என்ன காரணம் அதுவும் தெரியாது

சரி இந்தமாதிரி தற்கொலைகளால் என்ன நிகழ்ந்துவிட்டது? பெற்றோர் நிர்கதியானதை தவிர ஒன்றுமில்லை.

உணர்ச்சிமயமான தற்கொலைகள் ஒருநாளும் ஒரு தீர்வினையும் தராது என தெரிந்தபின்னும் சாகவேண்டுமா?, தற்கொலைகள் இந்த தேசத்தில் என்ன நீதியினை பெற்றுதரமுடியும்

ஒரு நாளும் அவை பெற்றுதராது, வெறும் உணர்ச்சி கொந்தளிப்பு அது..அர்த்தமிலா சாவு என்பதனை தவிர என்ன சொல்லமுடியும்..

ஆனாலும் பெற்றோரின் துயரத்தில் பங்கெடுப்பதற்காக பெருந்தன்மையுன்டன் சென்றிருக்கின்றார் பொன்னார், அங்குதான் செருப்பினை எறிந்திருக்கின்றார்கள் சிறுபுத்திக்காரர்கள்..

அஞ்சலி செலுத்த சென்ற பொன்னார் யார்? சாதியால் உயர்ந்தவரா? இல்லை சாதிபெருமை பேசுபவரா? அவரும் தாழ்த்தப்ட்ட சமூகமே, தாழ்த்தபட சமூக வலி அவரை விடவா எல்லோருக்கும் தெரிந்துவிடும்?

கொஞ்சமும் அறிவில்லாமல், யோசிக்காமல் இக்காரியத்தினை யாரோ செய்திருக்கின்றார்கள்

இணையம் துறைமுகம் முதல் ஜல்லிகட்டு வரைக்கும் பொன்னாரின் முயற்சிகள் பாராட்டபடதக்கவை.

பலமுறை எம்பியாகவும், அமைச்சராகவும் இருந்தபொழுதும் அவர் சொத்து சேர்த்ததாகவோ, பணம் குவித்ததாகவோ ஒரு சொல் சொல்ல முடியுமா?

அவ்வகையில் அம்மனிதர் பாராட்டுகுரியவர்.

அந்த எளிய மனிதனை நோக்கி செருப்பை எறிந்தவனை கண்டிக்கின்றோம், இந்த கலாச்சாரத்தை முளையிலே கிள்ளி எறியவேண்டும்..


வழிதவறிய சிலரால் தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள்: அமைச்சர் ஜெயகுமார்

யார்? 1972ல் அந்த ராமசந்திரன் வழிதவறி சென்றாரே, அதனைத்தான் அமைச்சர் சொல்கின்றார்

இப்படி உண்மையினை சொல்லுங்கள் அமைச்சரே..