தமிழக மீடியாக்களிடம் செய்தி பஞ்சம் நிலவுவது தெரிகின்றது.

தமிழக மீடியாக்களிடம் செய்தி பஞ்சம் நிலவுவது தெரிகின்றது.

பட்ஜெட் முதல் பாராளுமன்றம் வரை கிழித்தெறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கும்பொழுதும் அவர்கள் என்ன செய்கின்றார்கள்?

நடிகை கஸ்தூரியினை விரட்டி விரட்டி செய்தியாக்குகின்றார்கள்

அம்மணி சொன்னதாக ஒரு செய்தி, அதன் பின் அந்த அம்மணி நான் அப்படி சொல்லவில்லை என ஒரு செய்தி

பின் உண்மையினை சொல்கின்றேன் என அந்த அம்மணி மறுபடியும் ஒரு செய்தி

ஆக 3 நாட்களாக இழுத்தாகிவிட்டது..

கவனித்தால் அந்த அம்மணி என்ன கடைசியாக சொன்னாரோ அதுதான் முதல் செய்தியாக வந்திருக்கின்றது

ஆக அவர் சொன்னதை செய்தியாக போட்டால், நான் அப்படி சொல்லவே இல்லை என சொன்ன கஸ்தூரி, பின்னர் ஆம் அப்படித்தான் என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்

இதற்கு ஏன் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்??

4 நாட்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் வரும் வித்தை அவருக்கு தெரிந்திருக்கின்றது

அம்மணி வழக்கு ஏதும் தொடர்ந்துவிட கூடாதே எப்படி தடுக்கலாம் எனும் வித்தை பத்திரிகைகளுக்கு தெரிந்திருக்கின்றது


 

சசிகலா ஆளுங்கட்சியின் தற்காலிக பொதுசெயலாளர்..

(மறைமுகமாக) பழனிச்சாமி தற்காலிக முதல்வர்..

வித்யாசாகர் ராவ் தற்காலிக கவர்ணர்…

தமிழகத்தில் இப்பொழுது எல்லாமே “தற்காலிகம்” மக்களின் பிரச்சினைகளை தவிர..