சதி செய்து என கணவனை பிரித்துவிட்டார் சசிகலா : தீபா கண்ணீர்
எனக்கெதிராக சதி செய்து என கணவனை பிரித்துவிட்டார் சசிகலா : தீபா கண்ணீர்
அதிமுக தலமை எப்பொழுதும் அப்படித்தான், எம்ஜிஆர் பிரிக்காத ஜோடிகளா, குடும்பங்களா?
அந்த தெலுங்கு நடிகரிடம் இருந்து கூட பிரதான நாயகியினை யார் பிரித்தார் என்பதெல்லாம் வரலாறு
ஜெயா பிரிக்காத குடும்பங்களா? தாமரை கனியின் மகன் முதல் மு.க முத்துவரை எத்தனை பேரை குடும்பத்திற்கு எதிராக நிறுத்தினார்??
சசிகலாவினையே பிரித்து தன்னோடு வைத்திருந்தவர் அல்லவா அவர்.
அக்கட்சியின் பாரம்பரியம் அப்படி, கலாசாரம் அப்படி
இன்று அந்த கட்சியின் தலமைக்கு வந்திருக்கும் சசிகலா சிலபேரையாவது பிரிக்காவிட்டால் கட்சியின் பாரம்பரித்தினை காப்பாற்றுவது எப்படி?
இதோ தன் பங்கிற்கு தீபா குடும்பத்தை பிரித்து தன் கட்சியின் பாரம்பரியத்தினை காப்பாற்றிவிட்டார், கட்சி தலமைக்கு தான் பொருத்தமானவர் என நிரூபித்தும் விட்டார்
ஏம்மா தீபா? அரசியல் என்றால் டாஸ்மாக் கடையில் பீர் வாங்கி வருவது போல அவ்வளவு சுலபம் என்றா நினைத்து வந்தீர்கள்?
அரசியல் எப்படிபட்டது, எப்படி எல்லாம் அடிக்கும் , எப்படி எல்லாம் கண்ணை கட்டி அடிப்பார்கள் என்பது தெரியாமலா வந்தீர்கள்?
அரசியல் சூது எப்படி என முதல்முறையாக உணர்கின்றார் தீபா,
அம்மணி இதற்கே அசந்துவிட்டால் எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கின்றது
இந்த தளர்வினை எல்லாம் போக்கி தன்னம்பிக்கை பெறவேண்டுமென்றால் கலைஞர் படத்தினை அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள்
வோட்டினை வேண்டுமானால் உங்கள் அத்தை போன்ற முகம் வாங்கிதரலாம், ஆனால் அரசியல் சூதினை வெல்வது எப்படி என நீங்கள் கலைஞரிடம்தான் படித்தாக வேண்டும்