நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூட காரணமானவர்… மற்றும் விஷால் தேர்வு….

17499385_10208812478884411_5852522508445818457_n.jpg

எதற்கெல்லாமோ பேனர்கள் வைக்கும் தமிழ்நாட்டில், இதனை பெரிய பேனராக செய்து வைக்க வேண்டும்

அதுவும் பாமக அலுவலகம் முன்னால் எல்லாம் வைக்கவேண்டும், நாங்கள்தான் மதுகடைகளை மூடினோம் என கடும் அழிச்சாட்டியம்

அப்படி பாமக வழக்காடி மூடுவதாக இருந்தால், ஜெயா காலத்திலே செய்திருக்கலாமே என்றால் சத்தம் இல்லை, ஆனால் இப்பொழுது நாங்கள்தான் என பெரும் ஆரவாரம்

அப்படியானால் இவர் யார்?

தைலாபுரம் தோட்டத்தை சுற்றி மட்டும் 10 பேனர் வைக்க வேண்டும்..


பொதுமக்களை தொந்தரவு செய்தல், சமூக அமைதிக்கு தொல்லை கொடுத்தல் எனும் சட்ட பிரிவுக்குள் இந்த விஷால் எல்லாம் வரமாட்டாரா?

மனிதரின் இம்சை தாளவில்லை, ஏதோ டிரம்பினை தள்ளிவிட்டு வல்லரசு நாட்டின் அதிபரானது போல குதித்துகொண்டிருக்கின்றார்..