உக்கிரமாகின்றது ஆர்.கே நகர் இடைதேர்தல்
கோடை வெயிலை விட உக்கிரமாகின்றது ஆர்.கே நகர் இடைதேர்தல்
பன்னீர் முதல்வரானால் ஜெயா மரணத்திற்காக சசிகலா கும்பலை விசாரிப்பாராம், விடவே மாட்டாராம்
ஆனால் அவர் முதல்வராக இருந்தபொழுது என்ன செய்தார்? என கேட்க கூடாது, அப்பொழுது அவருக்கு ஆயிரம் வேலைகள்
திமுக ஆட்சிக்கு வந்தால் பன்னீர், சசிகலா என இருவரையும் முக ஸ்டாலின் விடமாட்டாராம்…
இந்த தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியினை பிடிப்போம் என்கின்றது தமிழிசை தரப்பு
ஆக இந்த ஆர்.கே நகர் இடைதேர்தலை சட்டமன்ற தேர்தலாகவே கருதி எல்லோரும் பேசிகொண்டிருக்கின்றார்கள்
கடும் வெயிலில் பிரச்சாரம் செய்தால் இப்படி சில பக்க விளைவுகள் வருவது சகஜம்தான்..