விவசாயிகள் போராட்டம்…

கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட்

தமிழக விவசாயிகள் சென்னை பக்கம் வராமல் டெல்லிக்கு சென்று ஒப்பாரி வைத்தனர்

சென்னை கோர்ட் இங்கே உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம், அங்கே என்ன சத்தம் என்பது போல சொல்லியிருக்கின்றது

சும்மாவே தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி, இதில் இந்த தள்ளுபடியில் இறங்கினால் அரசு தள்ளாடும் நிலை வரும்.

மாநில அரசு டெல்லி போராட்டத்தை அனுமதித்திருக்கின்றது, அதனை ரசிக்கின்றது என்ற எண்ணம் டெல்லிக்கு ஏற்பட்டிருக்கின்றது

டெல்லி வேறுமாதிரி விளையாடிவிட்டது, தமிழக அரசு தள்ளுபடி செய்யமுடியாது என சொன்னால், டெல்லி அங்கே கோவணத்துடன் இருப்பவர்கள் முன் வாய் மூடி சிரிக்கும், தமிழக அரசு ஒப்புகொண்டால் ஓடுங்கள் என விரட்டிவிடும்

தமிழக அரசுக்கு சிக்கலான நிலையினை டெல்லி ஏற்படுத்திவிட்டது

இனி டெல்லிக்கு விவசாயிகள் ஏதும் அடுத்த கோரிக்கை வைப்பார்களா? இல்லை கடன் தள்ளுபடியான மகிழ்வில் ரயில் ஏறுவார்களா என தெரியாது..

ஆனால் இனி கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்பொழுது, “டெல்லிக்கு ரயில் ஏறமாட்டேன், கோவணம் கட்டி போரடமாட்டேன் , கோர்ட்டுக்கு போகமாட்டேன்..” என எழுதி வாங்கிவிட்டுத்தான் கடன் கொடுக்கும்..