காஷ்மீர் பிரச்சினையில் தலையிட அமெரிக்காவிற்கு ஆசை….

காஷ்மீர் பிரச்சினையில் எப்படியாவது தலையிட வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசை

எதற்கு? இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாக இணங்கி, காஷ்மீரில் அமைதி திரும்பவா? இல்லை, அப்படிபட்ட நல்ல ஆசை எல்லாம் அமெரிக்காவிற்கு வராது

அதன் ஆசை எல்லாம் எப்படியாவது காஷ்மீருக்குள் வந்து, அங்கு தன் படைபிரிவினை நிறுத்தவேண்டும் என்பதே. 1950 முதல் அது இதற்காக காத்துகொண்டிருக்கின்றது, அதுவும் பாகிஸ்தான் அதன் கூட்டாளியான பின் அடிக்கடி சொல்லிகொண்டே இருக்கும்

அதுவும் சோவியத் வெளியேறிய ஆப்கனிலிருந்து தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்பி அங்கு குழப்பம் ஏற்படுத்தி தன் மூக்கை நீட்டமுடியுமா? என அவர்கள் பாகிஸ்தான் உதவியோடு செய்த அட்டகாசம் ஏராளம்

இந்தியா பிடி கொடுத்ததே இல்லை, மூன்றாம் நபரை உள்ளே விட்டால் என்னாகும் என்பதை அது இலங்கையிலே கண்டிருக்கின்றது , அது பெரும் குழப்பத்திற்கே இட்டு செல்லும் என்பது இந்தியாவிற்கா புரியாது?

எப்படி எல்லாமோ முட்டிபார்த்த அமெரிக்கா ஒபாமா ஆட்சியில் ஒதுங்கிற்று, பாகிஸ்தானை வைத்து ஏதும் செய்யமுடியாது, அது உருப்படாத தேசம் என அதற்கு புரிந்தது, காஷ்மீரா அது உங்கள் உள்நாட்டு பிரச்சினை எப்படியும் போங்கள் என சொல்லிற்று, இது இந்தியாவின் வெற்றி

இப்பொழுது வந்திருப்பது டிரம்ப் அல்லவா?, கென்னடியின் வரலாற்று நாற்காலிக்கு ஆசைபடுபவர் அல்லவா?

ஆசை இருக்கின்றதே தவிர கென்னடியின் ஆற்றல் இல்லை, அதனால் ஆங்காங்கே அடிபட்டு வந்து இப்பொழுது இந்தியா பக்கம் வந்திருக்கின்றார்

இந்திய வம்சாவளியான அமெரிக்கரை வைத்தே இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார் “காஷ்மீரில் நாங்கள் பேச வரட்டுமா?” என்பது போல பேச வந்திருக்கின்றார்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கொஞ்சம் தணிந்திருந்த பதற்றத்தை, ஜெருசலமேமில் அமெரிக்க தூதரகம் என சொல்லி கிளப்பிவிட்ட டிரம்ப் பற்றி இந்தியாவிற்கு தெரியாதா?

நன்றி, இதனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என சொல்லி டிரம்ப் முகத்தில் அடித்திருக்கின்றது இந்தியா

இந்த விஷயத்தில் இந்தியாவினை பாராட்டலாம், காங்கிரஸ் அரசின் கொள்கையினை மோடி அப்படியே பின்பற்றுகின்றார் வாழ்த்துக்கள்

டிரம்பிற்கு அழுகை வரும் நேரம்

சிரியா, இஸ்ரேல் என எங்கும் பேசமுடியவில்லை, காஷ்மீர் பிரச்சினையிலும் விரட்டிவிட்டார்கள்

புலிகள் இருந்தால் இலங்கையிலாவது பேசிபார்க்கலாம், அங்கும் இப்பொழுது அமைதி

“டேய் நான் உலக நாட்டாமைடா, எனக்கு ஏதாவது பஞ்சாயத்து கொடுங்கடா…நான் தீர்ப்புசொல்லணும்டா..” என கவுண்டமணி பாணியில் வெள்ளை மாளிகையில் குதித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்…