அங்கிள் சைமனின் ஆடியோ ….

அங்கிள் சைமனின் ஆடியோ ஒன்று கேட்க நேர்ந்தது

அதாகபட்டது அங்கிள் சைமனை ஆர்.கே நகரில் அவர் செதுக்கிய பிள்ளைகளும், இனமான தம்பிகளும் தெருவில் விட்டுவிட்டார்கள் போல, , ஆர்.கே நகர் வீதிகளில் “ஞான ஓளி” சிவாஜிகணேசன் போல மெழுகு வர்த்தியுடன் தனியே அலைந்திருக்கின்றார்

தனிமை பிரச்சாரத்தில் அங்களுக்கு ஞானத்திற்கு பதிலாக கடும் ஆத்திரம் வந்துவிட்டது,, கூடவே அழுகையும் வந்திருக்கின்றது

“தேவனே என்னை பாருங்கள்” என பாடல் பாடியதாக தகவல் இல்லை, மாறாக போனை எடுத்து தம்பிகளிடம் கொந்தளித்துவிட்டார்

“நான் தனியா போராடுரேன்…. நீங்கெல்லாம் புடுங்கவா போறீங்க…. 100 பேர் வரல்ல கொன்னுபுடுவேன் .. ….கட்சியினை விட்டு போயிட்டே இருப்பேன்” என மனிதர் கொந்தளிக்கின்றார்

வார்த்தைகளை பாருங்கள், புடுங்கவா போறீங்க..(அங்கிளை இதுவரை என்ன புடுங்கினார் என யாரும் கேட்டிருக்கலாம்)…கொன்னுபுடுவேன் (பிரபாகரன் தம்பி அப்படித்தான் சொல்வார்)…போயிட்டே இருப்பேன் (எங்க லண்டனுக்கா? ஈழத்திற்கா?) இப்படி எல்லாம் ஒரு கட்சி தலைவர் பேசிகொண்டிருக்கின்றார்

விரைவில் கட்சி தொண்டர்களே அங்கிளை ஓட அடித்து ஈழத்திற்கே விரட்டிவிடும் காலம் வரலாம்..