சமஸ் இன்று தமாஸு….
தமிழ் இந்துவில் சமஸ் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார், திராவிட இயக்கம் அடுத்த நூற்றாண்டில் எப்படி இருக்கவேண்டும் என சிந்திக்கின்றாராம்
தலித்துக்கள் முக்கியத்துவம், இஸ்லாமியர் முக்கியத்துவம் இன்னபிற சங்கதிகளை எல்லாம் அவர் ஆலோசனையில் சொல்கின்றாராம்
இதனை என்றோ திமுக செய்துதானே இந்த இடத்திற்கு வந்தது, கலைஞர் என்ன பிராமணனா? இஸ்லாமியர்கள் திமுகவில் இப்போது இல்லையா? அப்படி தனி இஸ்லாமிய இயக்கங்களும் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லையா?
என்றும் தமிழக சிறுபான்மையினரின் நம்பிக்கை திமுகவே அன்றி வேறு எதுவும் அல்ல, அதுதான் தங்களுக்கு பாதுகாப்பு என அவர்கள் மனமார நம்புகின்றனர்.
பிரமணர்கள் திமுகவிற்கு வரவேண்டுமாம், யார் தடுத்தார்கள்? திமுகவில் பிராமணர்களுக்கு இடம் இல்லை என அறிவாலய வாசலில் அறிவிப்பா செய்யபட்டிருக்கின்றது?
அவர்கள்தான் வரமாட்டார்கள் மாறாக அதிமுக, பாஜக என எதன்பின்னால் அல்லது முன்னால் நின்றுகொண்டு திமுக ஒழிக என சொல்லிகொண்டே இருப்பார்கள்..
மனிதர் பெரும் எழுத்தாளர் என நினைத்தால், அண்ணா திமுகவினையும் ஒரு திராவிட கட்சி என நினைப்பதில் மொத்தமாக சறுக்கியிருக்கின்றார், யாராவது கொஞ்சம் விபரம் தெரிந்தவன் அதனை கட்சி என்றே ஒப்புகொள்வதில்லை,இதில் அது திராவிட கட்சி என்றே அன்னார் சொல்கின்றார், அதிமுக கொள்கை எது என கேட்டாலே முடிந்தது விஷயம்.
அதிமுகவிற்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம்? சு.சாமியிடம் தொல்காப்பிய விளக்கம் கேட்க முடியுமா?
இன்னொன்று அவர் மறந்தாரா? இல்லை மறைத்தாரா என தெரியவில்லை
அதாவது காங்கிரஸ் காலத்திலே வென்று வந்த திமுக, இப்பொழுது பட்டவர்த்தனமாக சர்ச்சையினை கொண்டிருக்கும் பாஜக காலத்தில் எப்படி அழகாக ஸ்கோர் செய்யும் என்பதை ஏன் மறந்தார்,
ஆக மறைத்திருக்கின்றார்
பிரமண எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என ஆட்சிக்கு வந்ததுதான் திமுக, அது பிரிவினை வாதத்தை அது வீசிவிட்டபின்புதான் மக்களிடம் நெருங்கமுடிந்தது, வெற்றியும் பெற்றது
அதன் வேர் வேறுமாதிரியானது, ஒரு வித சீர்திருத்தமும் போராட்ட குணமும் நிரம்பியது, சுருக்கமாக சொன்னால் அந்த ஆரிய மூட கருத்துக்கள் பலம்பெறும் பொழுது திமுக தானகவே இன்னும் பலம் பெறும்.
இன்று இந்துத்வா பலம் பெறும் வேளையில், யோகி போன்ற சின்ன மோடிகள் பெண்ணடிமை வேண்டும் என மனுதர்மம் பேசும் காலத்தில் திமுக தானகவே வீறுகொண்டு எழும்
அதாவது காங்கிரசுக்கு மாற்றாக இன்னொரு கட்சி தேசிய அளவில் எழும்பியிருந்தால் திமுக சறுக்கலாம்,ஆனால் அதற்கு பாஜக சிக்கி இருக்கின்றது போததா?
ஆக இந்த இந்துத்துவா கோஷ்டிகள் பலம்பெறும் காலத்தில் திமுகவிற்கு என்றுமே பொற்காலம்தான்
காரணம் இதன் அடிப்படை இப்படியானது, இத்தேசம் வட இந்தியா தென் இந்தியா என்றுதான் பிரிக்கபட்டிருக்க வேண்டும், மக்களின் அடிப்படை குணம் அப்படியானது
அந்த ஜீன்கள்தான் திமுகவினை இயக்குவது, அது இன்னமும் இயக்கும், இயக்கிகொண்டே இருக்கும்
இதில் திமுக தலித், இஸ்லாம்,பிராமணர்களை அரவணைக்க வேண்டும் என என்னவெல்லாமோ ஆலோசனை சொல்லிகொண்டிருக்கின்றார்.
ஒரு ஆலோசனையும் வேண்டாம், திமுகவிற்கான வாசலை பாஜக கோஷ்டிகள் அகல திறந்து வைத்திருக்கின்றன
மனிதர் நன்றாக குழம்பியிருகின்றார், குழம்பிவிட்டு ஏதோ எழுதி எல்லோரையும் குழப்ப வந்திருக்கின்றார்
ஆனால் யாரும் குழம்பவில்லை, மாறாக கேள்வி கேட்டு அவரை இன்னும் குழப்பிகொண்டிருக்கின்றார்கள்.
திமுக நடந்து வந்த, நடந்துகொண்டிருக்கும் பாதையினை அப்படியே சொல்வதன் பெயர் எதிர்கால ஆலோசனையாம், எப்படி இருக்கின்றது?
சமஸ் இன்று தமாஸு….