தலாய்லாமா வந்ததில் பெரும் ஆச்சரியமல்ல….

ஒரு வழியாக தலாய்லாமாவினை அருணாசலபிரதேசத்திற்குள் இந்தியா அனுப்பிவிட்டது
அது 1960ல் இருந்தே சிக்கலான பகுதி, அங்கு என்ன பெட்ரோ, தங்கம் , வைரம் உண்டா என்றால் ஒன்றுமே இலை பின் ஏன் சீனாவிற்கு அவ்வளவு ஆசை
திபெத்தில் லார்சாவிற்கு பின் பெரும் புத்தமடம் அருணாசல பிரதேசத்தில்தான் உண்டு, அதுதான் சீனாவின் பயம், எங்கே புத்தமதம் கம்யூனிச சீனாவினை வீழ்த்திவிடுமோ எனும் பயம்.
தலாய்லாமா சீன எதிரியானது இப்படித்தான், அருணாசல பிரதேசம் எங்கள் பகுதி என அது சொல்வதும் இதற்காகத்தான்
இதில் பெரும் வீரமோ, தைரியமோ ஒன்றும் இல்லை, நமதுநாடு நமது விருந்தினர், நாம் அனுமதித்தோம்
நேரு, இந்திரா என எல்லோரும் செய்ததைத்தான் மோடியும் செய்தார், அதற்காக மோடி மார்பு ஜப்பான் முதல் திபெத் வரை விரிந்தது என சொல்வதில் அர்த்தமில்லை
வீரமாக ஒன்றை செய்யவேண்டுமென்றால் அப்படி செய்யலாம்
அதாவது சீனாவில் இஸ்லாமிய குரல்கள் உண்டு, உய்க்குர் எனும் மாநிலத்தில் இஸ்லாமிய போராட்டம் உண்டு, அதன் தலைவர் லண்டனில் வாழ்கின்றார், அவர் ஜனநாயாக் போராளி, அவர் பெயர் டோல் குன்
இன்றைய காலகட்டத்தில் அவர்தான் சீனாவின் பெரும் எதிரி
முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி மசூத்தினை உலகநாடுகளின் உதவியோடு இந்தியாவிற்கு கொண்டுவர முயன்றபொழுது சீனா, அவன் நல்லவன் ஆயிற்றே என ஒதுங்கியது, மசூத் இன்றுவரை நல்லவனாகவே பாகிஸ்தானில் இருக்கின்றான்
பின் இந்திய அரசு அந்த உய்க்குர் தலைவனை இந்தியாவிற்கு அழைத்தால் என்ன? அருணாசல பிரதேசத்தில் பேசவைத்தால் என்ன என சிந்தித்தது
பதறியது சீனா, கொந்தளித்தது
காரணம் தலாய்லாமா பிரச்சினை உலகறிந்தது, அவரும் உலகெல்லாம் சுற்றி நோபல் பரிசு வரை வாங்கி பெரும் பெயர் பெற்றுவிட்டார், எப்படியோ சமாளிக்கின்றோம், அவராவது புத்தமதம் உலகில் அனுதாபம் உண்டே தவிர ஆதரவு இல்லை
ஆனால் இந்த டோல் குன் இஸ்லாமியர், சீனா உய்கூரில் செய்யும் அட்டகாசங்களை சொல்லிகொண்டிருப்பவர், அவருக்கு இந்திய ஆதரவும் கிடைத்துவிட்டால்….பதறி அலறியது,
இந்தியா ராஜதந்திரமாக மசூத் விஷயத்தில் நீ ஓதுங்கு, இந்த டோல் விஷயத்தில் நான் ஒதுங்குகின்றேன் என சொல்லியிருக்கலாம்,
அப்படி ஒரு தந்திரமும் இந்தியாவிடம் இல்லை
ஆனால் இந்தியா பின் வாங்கிற்று டோல் குன்னுக்கு விசா கொடுக்கபடவில்லை,
பின் வாங்கியது இதே மோடி அரசு, ஒரு இஸ்லாமிய இயக்கத்து தலைவருக்கு இந்தியா துணைபோவதா? இது இப்பொழுது இந்து இந்தியா அல்லவா? என யாரோ கொளுத்திபோட்டதில் மோடி பின் வாங்கினார்
மத ரீதியாக பார்த்தார்களே ஒழிய, இதனால் சீனாவிற்கு எப்படி கரிபூசலாம் எனும் நாட்டு சிந்தனை அதில் இல்லை என்பது ஒரு தியரி
அவரை அனுமத்திருந்தால் மோடியின் இமேஜ் உலக அளவில் எங்கோ சென்றிருக்கும், ஆனால் தமிழிசையுடனும், எச்.ராசாவுடனும் கை குலுக்கும் மோடி ஏன் அப்படி ஆசைபடபோகின்றார்?
சீனாவின் வெற்றி அது
இன்று தலாய்லாமா தபாங் சென்றவுடன் சீனா சீறுகின்றது, அந்த சீறலில் தலாய்லாமாவிற்கே இப்படி என்றால், உய்க்குர் டோல் குன்னுக்கு எப்படி சீறுவோம் என உங்களுக்கு தெரியுமல்லவா? என்ற மிரட்டலும் ஒளிந்திருக்கின்றது
இந்தியாவும் தலாய்லாமாவிற்கு விசா கொடுப்போமே ஒழிய, உய்க்குர் இஸ்லாமிய தலைவரை எல்லாம் ஆதரிக்கும் எண்ணம் இல்லை என சொல்லாமல் சொல்கின்றது
ஆக இந்தியா பெரும் தைரியமான காரியம் செய்கின்றது, சீனா முகத்தில் தார் பூசுகின்றது என்றால் அந்த உய்க்குர் தலைவனை அழைத்திருக்க வேண்டும்
ஆனால் செய்யவில்லை ஏன்?
இதனை சொன்னால் நம்மை தேசதுரோகி என்பார்கள், அப்படி துரோகி என அழைக்கபட்டாலும் பரவாயில்லை, சீனாவிற்கு கரி பூச வேண்டுமென்றால் அழைக்கபட்டிருக்க வேண்டியது அந்த டோல் குன் தான்.
மற்றபடி தலாய்லாமா வந்ததில் பெரும் ஆச்சரியமல்ல, 1960 முதல் அவர் இதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்