இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்

இந்த உலகத்தில் இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள், யாரவது போராடியிருப்பார்கள் பலன் இவர்களுக்கு சேர்ந்திருக்கும், வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்கள்

அவர்களில் முதல் அதிர்ஷ்டசாலி ஜின்னா, அவர் இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் அல்ல, பாகிஸ்தான் வேண்டும் என துப்பாக்கி தூக்கியவரும் அல்ல,

கட்டபொம்மன் முதல் காந்திவரை போராடிய போராட்டத்தின் முடிவில் தனிநாடு கிடைத்தென்னவோ இவருக்குத்தான்.. வெள்ளையன் தானகவே தூக்கி கொடுத்து சென்றான், அவ்வளவுதான்.

பாகிஸ்தான் சுதந்திரபோர் என ஏதாவது வரலாற்றில் உண்டா? இல்லை

இன்னொரு அதிர்ஷ்சாலி தமிழக குல்லா ராமசந்திரன்,

பெரியார் கல்லெறிநடுவே இயக்கம் வளர்த்தார், அண்ணாவும் கலைஞரும் கால் தேய தேய நடந்து கட்சி வளர்த்தார்கள், அசால்ட்டாக வந்த ராமசந்திரன் எல்லாவற்றையும் அடித்து சென்றார்

இதெல்லாம் விதி, அவர்கள் விதி அப்படி இருந்திருக்கின்றது, ராமசந்திரனை விடுங்கள், ஜின்னாவினை பார்ப்போம்

ஒன்றுபட்ட இந்தியாவில் பம்பாயில் வளர்ந்தவர் ஜின்னா, நேரு போல பெரும் பணக்காரர், பெரும் மாளிகை மும்பையில் உண்டு. மகள் தீனா ஒரு பார்சியினை திருமணம் செய்தார் என்ற அவமானத்தில் கராச்சி சென்றார் அங்கு மன்னர் போல் வாழ்ந்தார், அங்கு இருந்துதான் தனிநாடு என முணுமுணுத்தார், பின் பாகிஸ்தான் தந்தையாக மறைந்தார்

அவரின் மகள் ஒரு பார்சியினை திருமணம் செய்தார் அல்லவா? அந்த பார்சி நெவிலி வாடியா, பாம்பே டையிங் நிறுவண தலைவர்

பாகிஸ்தானின் தேச தந்தையின் மகளை திருமணம் செய்ததால் அவர் தேசதுரோகி எல்லாம் இல்லை, அம்பானியின் ரிலையன்ஸுக்கு முன்புவரை அவர்தான் ஜவுளி உலக அரசர் இருக்கட்டும்

இப்பொழுது சிக்கல் அந்த ஜின்னாவின் மும்பை மாளிகை பற்றியது

அது பாகிஸ்தானுக்கு சொந்தம் என பாகிஸ்தான் சொல்லிகொண்டிருந்தாலும் , என் தாத்தா சொத்து என வாடியாவின் மகன் சொல்லி கொண்டிருந்தாலும் இந்திய சட்டம் குறுக்கே நிற்கின்றது

அதாவது பிரிவினையின் பொழுது பாகிஸ்தானுக்கு சென்ற மக்களின் இந்திய சொத்து “எதிரி சொத்து” என அது அழைக்கபடுகின்றது,

அவை எல்லாம் இந்தியாவிற்கே சொந்தம் அப்படி கிட்டதட்ட பல்லாயிரம் கோடி சொத்துக்கள் வட இந்தியாவில் உண்டு

ஜின்னாவின் மாளிகையும் அந்த சட்டத்தின் கீழ் வருகின்றது, அதனால் அது பாகிஸ்தானுக்கும் இல்லை, பாம்பே டையிங் குடும்பத்திற்கும் இல்லை

இப்பொழுது சிக்கல் டிரம்ப் வடிவில் வருகின்றது

டிரம்ப் ஏன் மும்பை வந்தார்? அவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றால் , அவர் வரவில்லை அவரின் பாஜக பிசினஸ் பார்ட்னர் வந்துவிட்டார்,

அவராக சொல்லவில்லை, யாரோ சொல்ல சொல்லிவிட்டார்கள் மனிதர் சொல்லிவிட்டார்

“இந்த பங்களாவினை பார்க்கும்பொழுது வயிரெல்லாம் எரிகின்றது, இந்த பங்களாவில்தான் இந்திய பிரிவினை சதிதிட்டம் தீட்டபட்டது, இதனை இடித்து வேறு மையம் கட்ட வேண்டும்..” என சாடியிருக்கின்றார்

இவர் ஒரு கட்டடம் கட்டும் தொழிலதிபர் என்பது இன்னொரு விஷயம், அவர் மும்பையில் டிரம்ப் டவர் கட்டிகொண்டிருப்பவர். ஆக டிரம்பின் கூட்டாளியே சொல்லிவிட்டார் எனுமளவிற்கு சர்ச்சை.

ஒருவர் தொடங்கிவிட்டால் பிரச்சினை வலுக்காதா? இந்தியாவில் வேலையற்றவர்கள் என்ன குறைவா? பெரும் கூட்டமாக காத்திருப்பவர்கள் அல்லவா?

ஒவ்வொருவராக கிளம்புகின்றார்கள், ஆம் அந்த துரோக அடையாளம் இருக்கவே கூடாது என பல குரல்கள்..

“கரசேவகர்கள்” வேறு கை வலிமை காட்டி நாளாயிற்று என்கின்றார்கள், அவர்கள் புஜம் துடிக்கின்றது, மீசை படபடக்கின்றது, கை பரபரக்கின்றது

, ஆனானபட்ட மசூதியினையே இடித்தவர்களுக்கு பாகிஸ்தான் தந்தையின் கட்டடமா பெரிய விஷயம்?

அந்த ஜின்னாவின் மகள் ஒரு பார்சியினை திருமணம் செய்ததால் இந்நாள்வரை கட்டடம் இருக்கின்றது, இந்து என்றால் அன்றே இடிபட்டிருக்கும்

ஆக இந்தியாவில் பிரச்சினை வலுக்க, பாகிஸ்தானில் துப்பாக்கி சத்தம் நடுவே அரசியல் செய்ய வழியின்றிருந்த நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் எல்லாம் துள்ளி எழுந்தாயிற்று

பாகிஸ்தானின் தந்தை ஜின்னாவின் மாளிகையினை இடிப்பதா? என ஒலம் தொடங்கியாயிற்று

ஏன் இவ்வளவு நாளாக இல்லாமல் இப்பொழுது?

ஆக்கிரமிப்பு காஷ்மீர் என இதுகாலம் சொல்லிவந்த பாகிஸ்தான் அதன் சில பகுதிகளை தன்னோடு இணைத்து இது பாகிஸ்தான் என சொல்லியாயிற்று, ஏன் என்றால் அம்மக்கள் இந்தியாவோடு இணைய ஆர்வம் கொண்டவர்கள்

அதனால் அதிரடியாக இறங்கிற்று பாகிஸ்தான்

இப்பொழுது பாகிஸ்தான் காலில் வெந்நீர் பட்டதுபோல் துடிக்க இந்தியா ஏதாவது செய்யவேண்டுமா இல்லையா?

செய்துவிட்டார்கள், அலறிகொண்டிருக்கின்றது பாகிஸ்தான்

இருக்கட்டும்

ஆனால் இந்த இரு குல்லாக்காரர்களின் ராசியினை பார்த்தால் அவர்களின் ஜாதகத்தை உடனே பார்க்கவேண்டும் என தோன்றுகின்றது

ஒரு புல்லும் புடுங்காமல் நாடே கிடைக்கின்றது என்றால் அவர்கள் ராசி எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?

ஆனால் ஜின்னா இறுதியில் வருந்தினார், பாகிஸ்தான் உருவானது எவ்வளவு பெரும் ஆபத்து என அவருக்கு புரிந்தது,

“நான் மிகபெரும் தவறு செய்துவிட்டேன், தனிநாடு கேட்டது தவறு, என் இறுதிகாலத்தில் மும்பை மாளிகையில் வசிக்க ஆசைபடுகின்றேன்” என சொல்லியபடியே செத்தார் ஜின்னா

அதிமுக உருவானது எவ்வளவு பெரும் தவறு என நம் கண்முன்னே பார்த்துகொண்டே இருக்கின்றோம்…

எந்த நோக்கமும் இன்றி யாரோ தூண்டிவிடுகின்றார்கள் நாம் தலைவராவோம், மன்னராவோம் என ஒருவர் சுயபுத்தியின்றி கிளம்பினால், அவருக்கும் கூட்டம் கூடினால், அது வருங்காலத்தில் எவ்வளவு பெரும் சீரழிவினை கொண்டு வரும் என்பதற்கும்,

தொலைநோக்கு இல்லா அவசரகுடுக்கைகள் அரசியல் செய்தால் வருங்காலம் என்னாகும் என்பதற்கும்

இந்த ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்