புட்டுகளில் சிறந்தது சுறா புட்டு..
உணவுகளில் புட்டு என்பது அவ்வளவு சுவையானது, பலவகையான புட்டுக்கள் உலெகல்லாம் உலாவுகின்றன
ஆனானபட்ட சிவபெருமானே புட்டிற்காக மண் சுமந்திருக்கின்றார் என்பதை விட அதன் பெருமையினை சொல்ல என்ன இருக்கின்றது?
பலவகை புட்டுக்களில் சுறா புட்டு மிக சுவையானது, சிவன் சைவம் என்பதால் அதனை சுவைத்திருக்க வாய்ப்பில்லை, சுவைத்திருந்தால் மதுரை கிரானைட் கல்குவாரி வேலைக்கும் வந்து திருவிளையாடல் நடத்தியிருப்பார்
அவதாரங்களில் மீனோடு கலந்தவர் இயேசு, மீணவர்களோடுதான் வாழ்ந்தார், மீன் பிடித்தார், மீன்களை வைத்துதான் புதுமைகள் எல்லாம் செய்தார், மீன்களை எல்லாம் பெருக பண்ணி அசத்தியிருக்கின்றார்.
அவ்வளவு ஏன் அவர் பாடுபட்டு உயிர்த்தபின்னும் வந்து சுட்ட மீனைத்தான் உண்டாராம்.
அவருக்கு மீன் மீதான பிணைப்பு அப்படி இருந்திருக்கின்றது.
இயேசு உயிர்த்ததை தாமஸ் எனும் சீடன் நம்பவில்லையாம், அவரை கண்டு அவர் காயத்தை தொட்டுபார்த்தால்தான் நம்புவேன் என்றாராம், இயேசுவும் வந்து என் காயத்தை பார் என்றதும் அழுதுகொண்டு நம்பினானாம்.
நம்மிடம் அப்படி இயேசு முன் வந்து நின்றால், எங்கே? இந்த 2 மீன் துண்டுகளை பல்லாயிரமாக பெருக பண்ணுங்கள், அப்பொழுதுதான் உங்களை நம்புவேன் என சொல்லத்தான் சிந்தனை செல்லும்..
இயேசுவுக்கு சுறா புட்டு உண்ண வாய்ப்பு இருந்ததில்லை, அப்படி அவர் சுறா புட்டு சுவைத்திருந்தால், பரலோகத்திற்ககு எல்லாம் எழுந்தருளியிருக்கமாட்டார், இங்கேயே கலிலேய கடலோரம் சுற்றி சுற்றிகொண்டே இருந்திருப்பார்..
புட்டுகளில் சிறந்தது சுறா புட்டு..