காற்று வெளியிடை நினைவுகள்…
உயிரே படத்திலிருந்து மணிரத்தினத்தின் சரிவு தொடங்கியது, சுஜாதா இல்லாதபின் அந்த தடுமாற்றம் அதிகமானது
குரு இந்திக்கான அம்பானிபடம் மனிதர் தப்பித்தார், குரு என்ன குரு? அண்ணாச்சி வைகுண்டராஜன் கதையினை இனி “மணல்” என எடுத்தாலும் படம் சூப்பர் ஹிட்டாகும், அம்பானியின் வாழ்விற்கு சற்றும் ரசனை குறையாதது அண்ணாச்சி வைகுண்டராஜனின் வாழ்க்கை.
“திருபாய்”, “வார்தாபாய்” வாழ்க்கைக்கு சற்றும் குறையாதது இந்த “திருச்செந்தூர்” பாய் வாழ்க்கை
ஆனால் அதனை செய்யாமல் மனிதர் வேறுபாதைக்கு சென்றுவிட்டார்
ராவணன் படத்தில் சுஹாசினியின் வசனங்களால் அடிவாங்கிய மணிரத்னம், அதன் பின் சறுக்கியதுதான் மஹா சறுக்கல்
கடல் எனும் படத்திற்கு பதிலாக “கடற்கரை மண்எ”ன அண்ணாச்சி கதையினை எடுத்தால் இன்னொரு நாயகனோ, குருவோ ரெடி..
கடல் என்றொரு படம் எடுத்தார், ஆனால் அதில் ஜெயமோகனை சேர்த்ததுதான் பெரும் விபரீதம்
ஜெயமோகன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கன்னியாகுமரி பிரிவின் சிலிப்பிங் செல் என்பது உலகறிந்தது, அவரும் எதற்கெடுத்தாலும் இஸ்லாமியரை வேறு விதமாக சீண்டும் மணிரத்னமும் இணைந்தால்..
பம்பாய் படத்தில் பர்தா விவகாரம் வெடிகுண்டுவரை சென்றதால் இம்முறை கிறிஸ்தவர்களை சீண்டலாம் என இருவரும் முடிவெடுத்தனர்
அதற்காக தென்னக கிறிஸ்தவர்களின் பெரும் அடையாளமான மணப்பாட்டினை தேர்ந்தெடுத்தனர், சூட்டிங் அங்குதான் நடந்தது
கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்களின் வாழ்வினை, கல்வியினை குறிவைத்து அடித்தனர், படம் முழுக்க கிறிஸ்தவ துறவிகளை துவைப்பதிலே இருவரின் கவனமும் இருந்தது.
குறிப்பாக கடலோர கிறிஸ்தவ மக்களை குறிவைத்தே இருவரும் காட்சிகளை தீட்டிகொண்டிருந்தனர், ஜெயமோகனின் அந்த மனகோளாறு படம் முழுக்க தெரிந்தது..
விளைவு கதையில் கவனமில்லை, பல்லிளித்தது
படம் மணிரத்னத்தை கடலில் தள்ளிவிட, ஜெயமோகனை வங்க கடலுக்கு அப்பால் எறிந்தது
உண்மையில் அது ஆர்எஸ்எஸ் வெறியர்களால் கொண்டாடபட்டிருக்க வேண்டிய படம், அவர்களை நம்பித்தான் மணிரத்னம் படமே எடுத்தார்
ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது, அந்த கும்பல் கைவிட்டது
“ஏய் ஆர்எஸ்எஸ் வெறியர்களே இது உங்களுக்கான படம், இருவர் படத்தினை ரத்தத்தின் ரதங்கள் ரசிக்காமல் விட்டது போல நீங்களும் இருந்துவிடாதீர்கள்.
ராவணன் படம் வீரப்பன் ரசிகர்களுக்கானது, பிரியா எனும் பெண் மூலம் வீரப்பன் வளைக்கபட்ட கதையின் சாயல் அது, எல்லை சாமி என வீரப்பனை கொண்டாடும் டம்ளர் பாய்ஸுக்கு அது புரியாமல் போனது போல புரியாமல் இருந்து விடாதீர்கள்..
இது முழுக்க முழுக்க கிறிஸ்தவ வன்மத்தில் எடுக்கபட்ட படம்..” என மணிரத்னம் சொல்ல முடியவில்லை
ஜெயமோகனாலும் சொல்ல முடியவில்லை, படம் தோற்றது
சரி அவர்கள் வாய்விட்டு சொல்ல முடியாவிட்டாலும், இந்த பரிவார கும்பல்கள் ஏன் அந்த படத்தினை புரிந்து கொள்ளமுடியவில்லை, படத்தினை ஏன் தோற்கவிட்டார்கள்?
அவர்கள் அறிவு அவ்வளவுதான், அவ்வளவு சிந்திக்கும் திறன் இருந்தால் ஏன் அந்த கும்பலில் இருக்கபோகின்றார்கள்??
காற்று வெளியிடை நினைவுகள்