டெல்லியில் தமிழக விவசாயிகள் அம்மண போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் அம்மண போராட்டம்
இந்த அம்மணத்தில் தெரிவது தமிழக ஆட்சி, தமிழக அரசியல்வாதிகளின் காட்சி..
அதுதான் தெரிகின்றதே அன்றி ,மோடிக்கு ஒரு … அல்ல
அணை கட்டினாயா? விவசாயினை வாழ வைத்தாயா? மணல் கொள்ளையினை தடுத்து நீர்வளம் பெருக்கினாயா? என இங்கே கோவணம் வரை காட்டிவிட்டு முடியாமல் டெல்லிக்கு சென்றால் ஒரு அனுதாபம் வரும்
இங்கு குரலை கூட காட்டாமல், அதுவும் ஆர்.கே நகர் தேர்தல் நிறுத்தபட்டவுடன் அம்மணமாக நிலமையினை சீரியசாக்குவது ஒரு அசிங்கமான அம்மண நாடகம்..
இதில் காரிதுப்பவேண்டியது தமிழக அரசியலின் மோசமான , தாழ்ந்த அரசியல் காட்சிகளை..
விவசாயி தன் எதிர்ப்பினை தெரிவிக்க எத்தனையோ வழிகளுண்டு, தமிழகத்தை முடக்கிவிட்டல்லா டெல்லிக்கு செல்லவேண்டும்
இங்கு போராடி பெரும் பிரளயம் வந்திருந்தால் டெல்லி இறங்கிவரும், அது தமிழக ஆட்சிகலைப்புக்கு கூட செல்லலாம்
ஆனால் தமிழகத்தை யாரும் ஆளட்டும், நாங்கள் டெல்லியில் வேட்டி அவிழ்ப்போம் என்பது காரி துப்பவேண்டிய விஷயம்..
இது தேசிய அவமானம் அல்ல, மாறாக தமிழக அரசியலின் அசிங்கம், அவமானம்.
தமிழக அரசியலும், கையாலாகா அரசும் , காசுக்கு வாக்களித்த தமிழர் மானமும் அங்கே அம்மணமாக நிற்கின்றது..
கலைஞர் ஆட்சி என்றால் ஈழபிரச்சினை முதல் அண்டை நாட்டுபிரச்சினைக்கு தமிழகத்திலே போரட வேண்டும், அவரை போட்டு பாடாய் படுத்தவேண்டும்
அதாவது வெளிநாட்டு பிரச்சினை பேச கூட டெல்லிக்கு செல்ல கூடாது, தமிழகத்தில்தான் கத்த வேண்டும்
ஆனால் அதிமுக ஆட்சி என்றால், குழாய் தண்ணி முதல் விவசாய பிரச்சினை வரை டெல்லிக்கு சென்றுதான் போராட வேண்டும்
எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா?
இதுதான் அம்மண தமிழக அரசியல், டெல்லியில் அதுதான் நடக்கின்றது..