காற்று வெளியிடை ஹேங்க் ஓவர் ….
என்னதான் காற்றுவெளியிடை சறுக்கினாலும் படத்தின் அழகு காட்சிகள் நிச்சயம் கண்ணுக்குள் கொஞ்சகாலத்திற்கு நிற்பவை
அந்த அழகிய இமயமலை சரிவு, தும்பை போன்ற பனி, சொர்கத்தினை மண்ணில் காணும் காட்சிகள் மிக ரம்மியமானவை
குறிப்பிட்டு சொல்லி கைதட்டவேண்டிய காட்சி உண்டு, நொடி காட்சிதான்
அதாவது கார் முன்னால், அதன் விளக்கு ஒளிரும் முன்னால் மங்கலான வெளிச்சத்தில் நிற்பார் நாயகி, கார் லைட் ஆண் செய்ததும் அப்படி ஜொலிப்பார், ஜொலிப்பது என்றால் சும்மா அல்ல, பவுர்ணமி நிலவில் தாஜ்மஹால் தங்கமாக ஜொலிப்பது போன்ற அழகு அது
அது என்ன ஒளி?, கேமரா எப்படி வைத்தார்கள்? எப்படி கதாநாயகி தங்கசிலையாக ஜொலித்தார் என்பதெல்லாம் ஒளிபதிவாளர் வித்தை, தங்க கதிரை நாயகி மீது பாய்ச்சியது போல அட்டகாசமாக தூள் கிளப்பியிருந்தார்கள்,
மிக அழகான ஒளி ஓவியம் அது, இனி பல படங்களில் நாயகிகள் அப்படி தங்க சிலையாக மின்னலாம்
நொடிகாட்சிதான் ஆனால் அந்த படத்தில் நின்றுவிட்ட காட்சி. அந்த படத்தின் உச்சபட்ச அழகுகாட்சி அதுதான்..
அந்த காட்சியினை பார்க்கும்பொழுது நமக்கு என்ன தோன்றும்? குஷ்பூவினை இம்மாதிரி ஒளிவித்தை முன் நிறுத்தினால் வைர சிலையாக மின்னியிருக்கமட்டாரா?
அவருக்கு ஏன் இம்மாதிரி லைட் வெளிச்சம் எல்லாம், சும்மாவே அவர் வைரசூரியனாகத்தான் இருக்கின்றார்
அப்படி இல்லாத கதாநாயகிகள் பாவம் இம்மாதிரி தங்ககதிர் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்துவிட்டு போகட்டும்
ஒரிஜினலான அவருக்கு ஏன் கூடுதல் வெளிச்சம்?
(எப்படியோ Babu Rao, Chandran Kannan போன்றோருக்கு முன் முந்திகொண்டோம், இல்லையென்றால் இப்படி ஒரு பதிவினை நயன் தாராவிற்காக பதிவிட்டிருப்பார்கள்
இனி என்ன செய்வீர்கள் எல்.கே.ஜி பாய்ஸ்? 🙂 )