அய்யாகண்ணு மட்டும்தான் விவசாயியா? தமிழகத்தில் வேறு விவசாயிகள் இல்லையா?
ஆற்று மணலை அள்ள சொன்னது மத்திய அரசு இல்லை, காவேரி தவிர மற்ற ஆறுகளின் சிக்கலுக்கு மத்திய அரசு காரணமில்லை
விவசாய நிலங்களை கட்டங்களுக்கு விற்க சொன்னதும் மத்திய அரசு இல்லை, அணைகள் கட்டுவதை தடுத்ததும் மத்திய அரசு இல்லை
நடுவெளியில் கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது நிலத்தடி நீரை கெடுத்ததும் மத்திய அரசு இல்லை,
தமிழக ஏரிகளை அழியவிட்டதும், விவசாய நிலங்களை பட்டாநிலமாக்கி கல்லூரிகளும் குடியிருப்புகளும் கட்டியதும் மத்திய அரசு இல்லை..
மோட்டார் கடை, போர்வெல் கம்பெனி எல்லாம் விவசாயிகளை வாட்டி வதைக்க மத்திய அரசும் காரணம் இல்லை,
தனியார் சந்தைகள், தரகர்கள் என விவசாயிகளை சூறையாடும் பல விஷயங்களை தமிழகத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது மத்திய அரசு இல்லை.
சுருக்கமாக சொன்னால் காவேரி விவகாரம் தவிர மற்ற தமிழக விவசாய விஷயங்களில் மத்திய அரசு மூக்கை நுழைப்பது இல்லை, தமிழக அரசின் விவசாய கொள்கையில் மத்திய அரசு தலையிட்டதே இல்லை,
விவசாயி அழியட்டும் நாங்கள் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வழங்குவோம் என ஆட்சிக்கு வந்தது மாநில கட்சிகள், அப்படி விவசாயி அழிந்தால் கள்ளுகடையில் சரிகட்டும் திட்டமும் அவர்களுக்கு இருந்தது
கள்ளுகடை பணமாவது விவசாயிக்கு போனதா என்றால் அது கட்சிக்காரன் பாக்கெட்டுக்கும், அரசுக்குமே சென்றது, ஆக விவசாயிகளை அழிக்க தொடங்கியது மாநில அரசே, நிச்சயம் இவர்களே பொறுப்பு
காவேரி விவகாரத்தில் கூட பெரும் போராட்டம் நடத்தவேண்டிய மாநில அரசு, கூவத்தூரிலும் ஆர்.கே நகரிலும் முஷ்டி தூக்குகின்றது
பிரச்சினைகளை தீர்க்கதான் நீங்கள், தீருங்கள் என்றால் கலைஞர் காரணம், முத்துவேலர் காரணம் அம்மா வாழ்க என சொல்லிவிட்டு அது ஓடுகின்றது, எந்த பிரச்சினையினை இந்த அரசு தீர்த்தது?
மாநில விவசாயிகளின் பிரச்சினையினை பேசவேண்டிய 36 அதிமுக எம்பிக்கள் பேந்த பேந்த முழித்துகொண்டிருக்கின்றனர்
டெல்லியில் அந்த எம்பிக்களை அல்லவா? இப்படி இவர்கள் உருண்டது போல உருட்டவேண்டும்?
நாங்கள் சாகின்றோம், ஜெயாவிற்கு பாரத ரத்னாவா? குற்றவாளிக்கு கோயிலா? என சொல்லி சொல்லி அவர்களை அல்லவா விரட்ட வேண்டும்? ஆடையோடோ அது இல்லாமையோ அவர்களை அல்லவா விரட்ட வேண்டும்?
அக இந்த விவசாயிகள் சட்டையினை பிடித்து இழுக்க வேண்டியது மாநில அரசையும்,அந்த எம்பிக்களையும்
விவசாயம் அழியும்பொழுது ஆற்றுமண் அள்ளுவது ஏன்? நீர்நிலைகளை கட்டாதது ஏன்? குளங்களை ஏரிகளை வீட்டு மனைகளாக்கியது ஏன்? கால்வாய்களை பட்டா நிலமாக்கியது எப்படி?
நாங்கள் செத்துகொண்டிருக்க இலவச பொருட்கள் தேவையா? யாருக்கு வேண்டும் மிக்ஸி,கிரைண்டர்? யாருக்கு வேண்டும் ஸ்கூட்டி? யாருக்கு வேண்டும் அம்மா விழா?
யாருக்கு வேண்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா?
விவசாயி அழியும்பொழுது இதெல்லாம் ஏன்? எல்லாம் ரத்து செய்யுங்கள் அந்த பணத்தில் விவசாயிகளை வாழ வையுங்கள் என கேட்டால் என்ன?
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுக்கும் உயர் சம்பளத்தில் அதுவும் மேமாதம் கோர்ட்டு, பள்ளிகள் விடுமுறை எனும்பொழுது அந்த சம்பளத்தை குறைத்து விவசாயிகளுக்கு கொடுங்கள் என கேட்டால் என்ன?
விவசாயத்திற்கு வழி இல்லா மாநிலத்தில் கோடி கணக்கில் நடிகனும், நடிகையும் அள்ளுவது எப்படி? யார் அனுமதிக்கின்றார்கள்?
ஆர்.கே நகரில் அள்ளிவிடும் பணங்களை விவசாயிகளுக்கு கொடுங்கள் என கேட்டால் என்ன?
டாஸ்மாக், திரையரங்கள், கேளிக்கை பார்களில் வரிகளை உயர்த்தி விவசாயிக்கு கொடுங்கள் என கேட்டால் என்ன?, டாஸ்மாக் வருமானத்தில் 10% விவசாயிக்கு கொடுத்தால் என்ன?
ஆடிகாருக்கு கூடுதல் வரி விதித்தாலே விவசாயிகளை காக்க முடியாதா?
ஆடியும், பென்சும் தமிழகத்தில் பெருகும் மர்மமே, கார்கள் பெருகும் மர்மமே வரி குறைவு என்பதால்தான், இதனை இன்னும் கூட்டி விவசாயிகளை காத்தால் என்ன?
இப்படி மாநில அரசு செய்யும் அத்தனை அழிவுகளையும், துரோகங்களையும் கேட்காமல் டெல்லிக்கு சென்று கேட்பார்களாம்
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா இலங்கை என எல்லா நாடுகளிலுமே வறட்சி நிலவுகின்றது, இது தேசிய பிரச்சினை
எல்லா மாநில அரசுகளும் அதனை சமாளிக்கின்றன, சந்திரபாபு சீமாந்திராவில் கலக்குகின்றார், தடுப்பணை கட்டி அசத்துகின்றார்
ஹரியானாவும் பஞ்சாபும் தண்ணீருக்கு பேச்சு நடத்துகின்றன, இன்னும் பல இடங்களில் சிக்கல் நீடிக்கின்றது
இந்த அய்யாகண்ணு கோவணத்தை அவிழ்த்துவிட்டார் என மோடி பேசவந்தால் நாடெல்லாம் அவர் 1 வருடம் பேசியாக வேண்டும்
அய்யாகண்ணு மட்டும்தான் விவசாயியா? தமிழகத்தில் வேறு விவசாயிகள் இல்லையா?
எந்த மாநில விவசாயியும் டெல்லிக்கு செல்லவில்லை, அவனுக்கு இது தன் மாநில பிரச்சினை என்பது புரிகின்றது, அந்த அரசுகளும் தங்கள் விவசாயி டெல்லிக்கு சென்றால் தங்களுக்கும் அவமானம் என கருதுகின்றன
அவர்களும், அந்த அரசுகளும் மானமுள்ளவை
தமிழனுக்கு அறவே மானமில்லை, தமிழக அரசுக்கு சுத்தமாக இல்லை..
ஆக அந்த மாநில அரசுகள் எல்லாம் விவசாயிகளை காக்கும்பொழுது இந்த கேடுகெட்ட தமிழக அரசு என்ன கிழிக்கின்றது என இவர்கள் வேட்டி அவிழ்க்க வேண்டிய இடம் சென்னை கோட்டையே தவிர டெல்லி அல்ல
எவ்வளவு வன்மம்? எவ்வளவு அழகான சதி? எவ்வளவு அரசியல்?
26 நாள் விவசாயம் பார்க்காமல் ஒரு விவசாயி டெல்லியில் சன்பாத் எடுக்க முடிய்மென்றால் அவன் நிச்சயம் விவசாயியாக இருக்க முடியுமா?
டெல்லி செல்ல செலவு, சாப்பாடு, இடம் எல்லாம் கொடுப்பது யார் பணம்? அந்த பணம் இருந்தால் விவசாயி விவசாயம் பார்ப்பானா? டெல்லி செல்வானா?
மோடி நிதானமான பிரதமராக இருப்பதால் விட்டுகொண்டிருக்கின்றர், இதுவே கொஞ்சம் கடுமையான பிரதமராக இருந்தால் வேட்டி அவிழ்தவுடன் வெட்ட வேண்டியதை வெட்டியிருப்பார்
அதனைத்தான் இவர்களுக்கும் இவர்களின் பின்னால் இருப்பவர்களுக்கும் செய்ய வேண்டும்.
இவர்கள் ஆடை அவிழ்த்து அட்டகாசம் செய்வதை தடுக்க காவல்துறை அனுப்பவேண்டாம், ஒரு மருத்துவர் குழுவினை அனுப்பலாம், வெட்ட வேண்டியதை வலியின்றி வெட்டுவார்கள்
இந்த அம்மண காமெடி கோஷ்டிகள் அறிவுள்ளவை என்றால் இப்படி டெல்லியில் கோஷமிடாது, மாறாக இப்படி செய்யும்
பஞ்சாப் முதல்வர், கன்னட, கேரள, ஆந்திரா முதல்வரின் செருப்புகளை வாங்கி, அதனை அணை கட்டிய காமராஜர் நினைவிடத்தில் வைத்து வணங்கி, நம்மாழ்வார் சமாதியில் வைத்து ஆசிவாங்கிவிட்டு
அந்த செருப்பால் எம்ஜிஆர், அம்மா சமாதிகளை அடித்து அடித்து போராடும்
அதில் ஒரு செருப்பு வாரினை அறிவாலயத்திலும் வீசலாம்..
அறிவுள்ள விவசாயி என்றால் அதனைத்தான் செய்திருக்க வேண்டும், இந்த அம்மண அழிச்சாட்டியம் அல்ல