தமிழருக்கு கேரளா வழிகாட்டுகின்றது..
கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கற்பித்தல் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது, அவசர சட்டம் இயற்றபட்டுள்ளது
இங்கு பழனிச்சாமி அரசுக்கு இப்படி அவசர சட்டம் இயற்ற சொல்லி சொல்லபோவது யார்?
ஜல்லிகட்டிற்கு பொங்கிய தமிழகம், இப்படி மொழி காக்கவும் எழும்பினால் அது வரலாறு என நிலைக்கும்
அய்யாகண்ணு கோவணம், ஆர்.கே நகர், விஜய பாஸ்கர் என தமிழனின் சிந்தனை தற்போது இருப்பதால் கேரள பாணி சட்டம் எல்லாம் இங்கு பேச யாருமில்லை
இதற்கு இந்த தமிழ் உணர்வாளர்கள் என சொல்லிகொள்ளும் கும்பல்தான் குரல் எழுப்பவேண்டும் என அவசியமில்லை, தமிழை தாய்மொழியாக கொண்ட எல்லோருக்கும் அந்த கடப்பாடு உண்டு
மீடியா முதல் சினிமா வரை இங்கு தமிழ்படுத்தவேண்டிய, சுத்தமாக்க வேண்டிய தமிழ்விஷயம் நிரம்ப உண்டு..
அங்கு யாரும் கேட்காமலே அரசு செய்கின்றது, இங்கு தொடர்ந்து அடித்தால்தான் யோசிக்கவாது செய்வார்கள்..
ஈழ மக்களிடம் இருந்துதான் மொழி பக்தியினை கற்க மறந்தோம், இனி மலையாளிகளிடமிருந்தாவது மொழி காக்க கற்போம்..
தமிழருக்கு கேரளா வழிகாட்டுகின்றது..
இன்றைய காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு தேவையற்றது :- பிரேமலதா.
இன்றைய காலகட்டத்தில் தேமுதிக கூட தேவையில்லா கட்சிதான், என்ன செய்வது?