அரசியல் விமர்சனங்கள் ….
கல்லகுடி போராட்டத்தை தொடர்ந்து கலைஞரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்கள், அவர் வெளிவருவதில் சில சட்ட சிக்கல்கள் இருந்தன
ஆனால் முதல்வர் பக்தவச்சலம் மிக விரைவாக செயல்பட்டு அவரை விடுதலை செய்தார், பல வினாக்கள் அவர் மீது எழுந்தன, பக்தவச்சலம் அமைதியாக சொன்னார்
“அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம், அவர் எதிர்கட்சியாக இருக்கலாம், ஆனால் மிகசிறந்த அறிவாளி ஒருவர் சிறையில் இருப்பதை நான் விரும்பவில்லை”
இந்த கருத்துக்கு காமராஜரும் மறுப்பு சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது
பின்னாளில் டெசோ அமைப்பிற்காக வாஜ்பாயினை கலைஞர் அழைத்தபொழுது, “மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஈழ மக்களுக்காக மொத்த இந்தியாவினையும் சகோதரகளாக திரட்டும் இந்த அறிவார்ந்த சிந்தனைக்காக கருணாநிதியினை நான் வாழ்த்துகின்றேன்..” என சொன்னவர் வாஜ்பாய்
பின்னாளில் வாஜ்பாய் மந்திரிசபையில் திமுக இடம்பெற்றதும் அப்படித்தான்
ஆக கலைஞரின் மதிநுட்பத்தை காங்கிரசாரும், பாஜகவினரும் உணர்ந்தே பாராட்டினர், அப்படி வாஜ்பாயும் அத்வாணியும் ஒப்புகொண்ட விஷயத்தை நாம் சொன்னால்…
நாம் ஒன்றுமே தெரியாமல் கலைஞரை மதிக்கின்றோமாம், நாம் பாஜக எதிரி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
அவர்கள் அரைகுறை பாஜக என்பது நன்றாக புரிகின்றது.
கலைஞரை பற்றி வாஜ்பாயிடம் சில விஷயங்களை கேட்டுவிட்டு வாருங்கள், அவர் உங்கள் கட்சிதான். பாஜகவின் மிக சில நல்ல அடையாளங்களில் அவரும் ஒருவர்.