லியானர்டோ டா வின்சி பிறந்த நாள்

லியானர்டோ டா வின்சி :  தோற்றம் : 15-04-1452 ::  மறைவு : 02-05-1519

உலகில் எத்தனையோ கலைஞர்கள் வந்தார்கள், தங்கள் கலையில் மட்டும் மிக சரியாக முத்திரை பதித்தார்கள், வெகு சிலரே பல பல கலைகளில் வித்வான்களாக இருந்தனர்

அவற்றில் ஒருவர்தான் லியானர்டோ டா வின்சி

மனிதர் அப்படி ஒரு வித்தகர், ஒவியம், சிற்பம், கட்டடம், உடற்கூறியல், வானியல் என எல்லா விஷயங்களிலும் பின்னி எடுத்தார்

கல்லறை பிணங்களை தோண்டி எடுத்து உடல் கூறியல் மருத்துவம் படிக்கும் அளவிற்கு அவருக்கு தேடல் இருந்தது, அவரது உடல்கூறியல் குறிப்புகள் மருத்துவ துறைக்கு அவ்வளவு முன்னோடியானவை

பொறியில அறிவும் அவரிடம் இருந்தது, இன்றைய விமானம், ஹெலிகாப்டர் போன்றவற்றை அன்றே தன் ஓவியங்களில் வரைந்து வைத்திருந்தவர்

வானியல் அறிவும் அவருக்கு இருந்தது, கோள்கள் பற்றி, நட்சத்திரம் பற்றியும் ஆய்வுகள் செய்திருந்தார்

அவர் வாழும்காலத்தில் மிஸ்டர் இத்தாலி எனும் அளவிற்கு அவரின் உடல்கட்டும் இருந்திருக்கின்றது, பாடி பில்டிங் கலைக்கும் அவர் முன்னோடி

இப்படி எல்ல்லாம் விஷயங்கள் சாத்தியம் என அவர் பொறியில, மருத்துவத்தில் சொன்னாரே தவிர, முறையான படிப்பும் அன்றைய காலத்தில் சோதனை சாலைகளும் இல்லாததால் விஞ்ஞானிகள் வரிசையில் அவரால் சேரமுடியாமல் சென்றது

அதாவது தன் சுய அறிவால் அவர் என்றோ சிந்தித்த விஷயங்கள் பின்னாளில் சாத்தியமாயின, உதாரணம் ஹெலிகாப்டர்

இப்படி பலதுறை வித்தகரான டாவின்சி, உலகிற்கு ஒரு ஓவியராக மட்டும் அறியபட்டதுதான் சோகம், அவரின் ஒரு முகம் ஓவியர் முகம்

இயேசுவின் ஞானஸ்நானம், இயேசுவின் இறுதி இரவு உணவு பொன்ற ஒவியங்கள் அவருக்கு ஓவிய உலகில் தனி இடம் பெற்றுகொடுத்தன‌

கிறிஸ்தவ விட்டு சாப்பாட்டு மேசைக்கு மேல் தொங்கிகொண்டிக்கும் அந்த ஓவியம் அவர் அவர் வரைந்தது, இயேசுவின் எல்லா வாழ்கை காலங்களுக்கும் அவர் ஓவியம் வரைந்திருந்தார், அப்படி அதனையும் வரைந்திருந்தார்

எல்லாவற்றிற்கும் மேலாக‌ அந்த மோனலிசா ஓவியம், மர்ம புன்னகைக்கு பெயர் பெற்ற அந்த ஓவியம்.

கண்பார்க்கும் விதம், கொஞ்சம் இயற்பியல் , பார்வை பிழை எனும் தத்துவம், அழகான ஓவியம் என எல்லாம் கலந்து அந்த ஓவியத்தை டாவின்சி பின்னியிருந்தார்.

வரலாற்றில் அவ்வோவியம் மங்கா புகழ் பெற்றிருப்பது அப்படித்தான், பலமுறை களவாடபட்டதும், இன்று இருப்பது உண்மை ஓவியமா? என தெரியாத அளவிற்கு அதன் புகழ் பெரிது

ஒருமுறை அது காணாமல் போய், அது இருந்த வெற்று சுவரை காணவே கோடி மக்கள் கூட்டம் குவிந்தது

அப்படி பெரும் புகழ்பெற்றவர் டாவின்சி, நமது ரவிவர்மாவிற்கு அவர்தான் முன்னோடி

இயேசுபெருமானின் தத்ரூப ஓவியங்களை டாவின்சி தொடங்கி வைத்தபின்புதான், காலம் கடந்து அதனை கண்டபின்புதான் கேரளத்து ரவிவர்மன் ராமன், கிருஷ்ணன் போன்ற உருங்களை இந்தியாவின் இந்துக்களுக்கு கொடுத்தான்

இந்த பெரும் ஓவியபுரட்சியினை உலகிற்கு கொடுத்தவன் அந்த டாவின்சி

இன்று அவரின் பிறந்தநாள், பல துறைகளில் முத்திரை பதித்திருக்க வேண்டிய அந்த விஞ்ஞான கலைஞன், ஒரு ஓவியனாக மட்டும் தன் தடத்தினை பதித்துவிட்டு சென்றான்

உலக வரலாற்றில் மறக்க முடியாத கலைஞன்…

அந்த மோனாலிசா ஓவியம் பெரும் அழகு அல்ல, அதன் மர்ம சிரிப்பு அவ்வளவு அழகு, அதாவது நாம் நோக்கும்பொழுது அதன் உதடுகள் சிரிப்பது தெரியாது, ஆனால் பார்வை நகர்த்தினால் அந்த மோனாலிசா நம்மை நோக்கி சிரிப்பது புரியும்

அந்த மர்ம சிரிப்பினை உலகில் எங்கும் காணமுடியாது, அப்படித்தான் உலகம் நம்பிகொண்டிருக்கின்றது

ஆனால் குஷ்பூ படத்தில் அந்த மர்ம சிரிப்பு இருப்பது யாருக்கும் தெரிய்வில்லை, நமக்கு தெரிகின்றது, இன்னும் 100 வருடம் கழித்து மோனலிசா படத்தருகே குஷ்பூ படமும் இடம் பெறலாம்,காலம் அதனை செய்யலாம்

இன்று அவரின் பிறந்தநாள்…

மானிட கலையின் உச்ச கலைகளில் ஒருவனான அந்த டாவின்சியினை நினைத்துகொள்ளலாம்.

அவனின் ஒரிரு படைப்புகள் உலகபுகழ் பெற்றிருக்கலாம், ஆனால் அவனின் எல்லா படைப்புகளும் பெரும் ஆச்சரியமானவை, பல அவன் படிப்பறிவில்லாதவன் என்பதால் புறக்கணிக்கபட்டன‌

ஆனால் அந்த காலகட்டத்தை ஒப்பிட்டுபார்க்கும்பொழுது அவன் மிகபெரும் அறிவாளி, காலத்தால் முன்னே வாழ்ந்துவிட்டு சென்ற துரதிருஷ்டசாலி என்பது பட்டும் புரிகின்றது,

பெரும் மகோன்னதமான ஆச்சரிய‌ கலைஞன் அவன்..