ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Image may contain: 3 people, people smiling

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

விசாரியுங்கள், நன்றாக விசாரியுங்கள்

ராஜிவ் கொலையின் மூலம் எது? அமைதிபடையினை இலங்கைக்கு அனுப்பிய விவகாரம்

அங்கு இந்தியபடைகள் புலிகளால் இறந்துகொண்டிருக்கும் பொழுது, காயம் பட்ட புலிகள் சிகிச்சைபெற்ற இடம் தமிழகம், அதாவது ஒரு இந்திய மாநிலம்

ஆக இந்திய ராணுவத்தோடு மோதிய புலிகளுக்கு, கிகிச்சை அளிக்கபட்ட இடம் இந்தியாவில் ஒரு மாநிலம்

எப்படிபட்ட விசித்திரமான கொடுமை இது?, இப்படிபட்ட நிலை உலகில் எங்காவது நடக்குமா?

தன் சொந்த நாட்டு படைகளை கொன்று குவிக்கும் அன்னிய நாட்டு இயக்கத்திற்கு இயக்கத்திற்கு ஒரு மாநிலம் ஆதரவு கொடுத்ததென்றால் அது தேசதுரோகம் அன்றி வேறேன்ன?

யாழ்பாண மருத்துவமனையில் புலிகளை இந்தியபடை தேடிகொண்டிருந்தபொழுது அவர்களோ இந்தியாவின் தமிழக நகரமான மதுரையில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்தனர்

அப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தோம் என பழ.நெடுமாறன் முதல் வைகோ வரை பகிரங்கமாக இன்றுவரை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அப்படிபட்ட நிலைக்கு காரணம் யார்? சாட்சாத் அன்றைய தமிழக முதல்வர் ராமசந்திரன், இந்திய ராணுவத்தை எதிர்த்த காலங்களில் புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்தவர் அவர்தான்

அந்த பின்னணியில்தான் புலிகளால் போராட முடிந்தது பின் வெற்றிபெறவும் முடிந்தது, பின் வந்த தமிழக அரசுகளும் புலிகளை கண்டுகொள்ளவில்லை, விளைவு ராஜிவினை தமிழகத்தில் கொல்லும் முடிவினை புலிகள் எடுக்க துணிந்தனர்

இந்திய சட்டத்திற்கு உட்பட்டு பதவிபிரமாணம் எடுத்த முதல்வர் எப்படி அந்நிய நாட்டு தீவிரவாதிகளுக்கு அதுவும் இந்தியாவினை எதிர்த்த தீவிரவாதிகளுக்கு துணைபோனார், அவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இன்றுவரை சந்தேகமே

கலைஞர் ஆட்சியில் புலிநடமாட்டம் இருந்ததென்று ஆட்சிகலைப்பு வரை சென்ற டெல்லி , எம்ஜிஆர் ஆட்சியினை விட்டு வைத்திருந்தது ஏன்?

ஆக இந்திய ராணுவத்திற்கு துரோகம் செய்து, அவர்களை கொன்ற புலிகளுக்கு துணைபோனவருக்குத்தான் “பாரத ரத்னா” கொடுத்து வங்க கடல் அருகில் தூங்க வைத்திருக்கின்றது இத்தேசம்.

அதனால் சொல்கின்றோம், நன்றாக ராஜிவ் வழக்கினை மறுபடி விசாரியுங்கள் எல்லா “துரோகிகளும்” சிக்கட்டும், சிறையில் தேசதுரோகியாக இருக்கும் நபரும் அப்படியே நிரந்தரமாக இருக்கட்டும்..