குஷ்பு வருகையால் ஸ்பானிய நாட்டில் ஆயிரம் மலர்கள் மலர்ந்தது….
குஷ்பூ ஸ்பெயின் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆக ஸ்பெயின் திருவிழா கோலம் பூண்டிருப்பது நிச்சயம்.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி விளையாடும் ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு கூடும் கூட்டத்தை விட, குஷ்பூவிற்கு கூட போகும் கூட்டம் நிச்சயம் பெரிது
சும்மாவே ஐரோப்பா பாதுகாப்பு சிக்கலில் இருக்கின்றது, எமது கவலை எல்லாம், இம்மாதிரி திருவிழாவில் ஏதும் தீவிரவாத தாக்குதலை சண்டாளர்கள் நடத்த திட்டமிட்டுவிட கூடாது என்பதுதான்.
எந்த தீவிரவாதி அப்படி தாக்குதல் நடத்திவிடுவான்? குஷ்பூவினை பார்த்துவிட்டால் இந்த உலகம் அழகால் நிரம்பியது என்ற எண்ணம் அவனுக்கு வந்து நிச்சயம் திருந்துவான், அதனால் ஆபத்து அறவே இல்லை
மேலாக நாம் வணங்கும் புனித அந்தோணியார் ஸ்பெயின் நாட்டு பாதுகாவலராக கத்தோலிக்க திருச்சபையால் அறிவிக்கபட்டிருக்கின்றார், அதனால் குஷ்பூவின் ஸ்பெயின் பயணம் மகிழ்வாக அமைய அவரிடம் மன்றாடலாம், அவர் நிச்சயம் பாதுகாப்பார்,
புண்ணியங்கள் பல செய்திருக்கும் ஸ்பெயின் நாடு, இப்பொழுது நடமாடும் அதிசயத்தையும் பார்த்துகொண்டிருக்கின்றது.
தமிழகம் பெற்ற இன்பம், பெறுக வையகம்