திடீரென கொரிய யுத்தம் மூளூமானால்…

திடீரென கொரிய யுத்தம் மூளூமானால் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர் நிலை என்ன ஆகும்?

அவர்களை மீட்க இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கின்றது என இதுவரை சொல்லவில்லை, சொல்லபோவதுமில்லை

இதுவே பாஜக எதிர்கட்சியாக இருந்தால், ஏன் இன்னும் கப்பல் அனுப்பவில்லை எனும் அளவிற்கு குதிப்பார்கள், ஆளும்கட்சி அல்லவா மகா அமைதி

முன்பு பாகிஸ்தான் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அமைதி காத்ததற்காக சேலை எல்லாம் அனுப்பினார்கள், இப்பொழுதும் பாகிஸ்தான் அதே அழிச்சாட்டியம் தான் செய்கின்றது, சீனா அதற்கும் மேல் ஆனாலும் பாஜக அரசு அமைதி காக்கின்றது

காங்கிரஸ் ஏதும் அமைதிகாத்தால் அது அச்சம், கையாலாததனம் என சாடுவார்கள், அதனையே மோடி செய்தால் அது ராஜதந்திரமாம்

விரைவில் இவர்களுக்கு கொலுசு, மூக்குத்தி போன்றவைகள் அனுப்பபட்டாலும் ஆச்சரியமில்லை