எங்கோ இருக்கும் பஞ்சாபியர் இந்த சாதியா?
எங்கோ இருக்கும் பஞ்சாபியர் இந்த சாதியா? அட்டகாசத்திற்கு ஒரு அளவே இல்லையா?
(எல்லா நாடுகளிலும் அவனவன் நாட்டுக்காரனை சொந்த நாட்டுக்காரன் என்றுதான் அழைப்பார்கள், அத்ற்காக அவர்கள் எல்லாம் நாடார் ஜாதிகளா?
நாட்டுக்காரன் எல்லாம் நாடார் என்றால், சந்துக்குள் வாழ்ந்தவன் எல்லாம் சாணாரா?)
ஜஸ்ஸா சிங் நாடாரா? அப்படியானால் அய்யா வைகுண்டர் என்ன குஜராத்தியா?
இந்த ஐதரபாத் நிஜாம் ஓஸ்மான், ஆற்காடு நவாப், திப்பு சுல்தான், மங்கள் பாண்டே, பிளாசி சுல்தான், பிஜப்பூர் சுல்தான், மலபார் மன்னன் எல்லோரும் விரைவில் நாடாராகும் வாய்ப்பு உள்ளது
அப்படியே காஷ்மீர் சிக்கலின் தொடக்கபுள்ளி மன்னன் ஹரிசிங் ஒரு நாடார் என சொன்னால் இன்னும் சாதிபெருமை நன்றாக விளங்கும்
பாகிஸ்தான் தீவிரவாதி மவுனாலா மசூத்தும் ஒரு நாடாரோ? என பகீர் சந்தேகம் தோன்றுகின்றது
விரைவில் பஞ்சாபை தாண்டி ஈரான் பக்கம் சென்று, அய்யதுல்லா கோமேனி ஒரு நாடார் என விரைவில் இவர்கள் சொல்வார்கள் அல்லவா? அன்று ஈரானியர் வந்து பொடரியில் போடுவார்கள்
அவர்களே யாரையாவது அடிக்கலாம் என சுற்றிகொண்டுதான் இருக்கின்றார்கள்
ஏன் இப்படி கிளம்புகின்றார்கள் என்றால், நாடார்கள் சரத்குமார் தலமையில் தமிழக ஆட்சியினை பிடித்தது போல, இந்தியாவெங்கும் இருக்கும் நாடார்களை திரட்டி இந்திய ஆட்சியினை பிடிக்க போகின்றார்களாம்
ஒருவேளை சிம்ரனும், டாப்சியும் நாடார்கள் என சொல்லும் மர்மம் இருக்கலாமோ? அடுத்த நாடார் சங்க தலைவர் சிம்ரனா?
இந்த அலப்பரைகள் வடகொரிய தலைவரையும் விரைவில் நாடார் என கண்டுபிடிப்பார்கள் என்பது மட்டும் புரிகின்றது
(ராஜாபளையம் பஸ்ஸ்டாண்டை தொடர்ந்து இனி தமிழக பக்கமும் வரமுடியாது 🙂 )