வடகொரியா செய்யுமா என்றால் சிரமம்
அதிமுகவினை அடக்க வேண்டுமென்றால் இரட்டை இலையினை முடக்கவேண்டும், பாஜகவினை முடக்க வேண்டுமென்றால் பாபர் மசூதி கட்டவேண்டும், வன்னியரை பிரித்துவிட்டால் ராமதாஸ் மட்டை , பிரபாகரனின் நெருங்கிய புலி கிடைத்துவிட்டால் சீமானை ஓட அடிக்கலாம் இப்படி பல தந்திரங்கள் உலகில் உண்டு
அப்படி அமெரிக்காவினை யுத்தத்தில் வெல்ல ஒரு எளிய வழி அவர்களின் செயற்கை கோள்களை அழிப்பது
அமெரிக்க எல்லா ஆயுதங்களும் பெரும்பாலும் செயற்கை கோள்களை நம்பியே இருப்பவை, அவைகளை அடித்துவிட்டால் அமெரிக்கா ஜெயா இல்லா அதிமுக
இதனை முதலில் சொன்னது ரஷ்யா, இன்று வரை அமெரிக்க செயற்கை கோள்களை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு, கொஞ்ச வருடத்திற்கு முன்பு சீனா தன் ஏவுகனையால் அமெரிக்க செயற்கை கோளை தகர்த்து எச்சரித்த சம்பவமும் உண்டு
இப்பொழுது வடகொரிய அதிபருக்கு அமெரிக்க செயற்கை கோள்களை அடக்க ஆசை, விண்வெளியில் அணுகுண்டை வெடிக்க வைத்தால் என்ன? என யோசிக்கின்றார் என பரபரப்பு செய்தி வருகின்றது
அப்படி நடந்தால் அது எல்லா நாட்டு செயற்கைகோள்களையும் பாதிக்கும், அப்படி நடந்துவிட்டால் உலகம் கொஞசநாளைக்கு இயங்காது, எல்லோரும் வீட்டில் சிறைவாசம் இருக்கலாம், போன் கூட வேலை செய்யாது
அந்த அளவிற்கு வடகொரியா செய்யுமா என்றால் சிரமம், ராக்கெட் அவர்களிடம் இல்லை, ஆனால் அமெரிக்க செயற்கை கோளை தகர்க்க கடும் வெறியில் அலைகின்றது
வடகொரிய அதிபர் தமிழ்படங்களை பார்க்காதது நல்லது, பார்த்துவிட்டால் அமெரிக்க செயற்கை கோளை உடைக்க நமது சினிமா ஹீரோக்களை அழைத்தாலும் அழைப்பார்..