எப்படி இருக்கின்றது இந்த காமெடி?

கடமை, கண்ணியம், கட்டுபாட்டினை கடைபிடிக்க கலைஞருக்கு சொன்னவர் எம்ஜிஆர் : எடப்பாடி பழனிச்சாமி

எப்படி இருக்கின்றது இந்த காமெடி?

உங்கள் வசனத்தில் நான் நடிக்காமல் எனக்கு எதிர்காலமில்லை, எனக்கு ஒரு வாய்ப்புகொடுங்கள் என கலைஞர் முன்பு நின்றவர் அந்த ராமசந்திரன்

இயக்கத்தில் சேருகிறேன் என ராமசந்திரன் வந்தபொழுது, “இந்த நெற்றிபட்டை மற்றும் ருத்திராட்சத்தோடா” என கலைஞர் கேட்டவுடன் , அவ்வளவுதான் விஷயமா? என சொல்லி நெற்றியினை துடைத்துவிட்டு கழகத்தில் சேர்ந்தவர் ராமசந்திரன்

1960களில் தமிழகம் இந்தி எதிர்ப்புக்கு எதிராக பற்றி எரிய, எங்கோ கோவாவில் ஆயிரத்தில் ஒருவன் படபிடிப்பில் இருந்தவர் அந்த ராமசந்திரன், அவரின் “கடமை” அங்குதான் இருந்தது

வெண்ணிற ஆடை நிர்மலாவிற்காக மேல்சபையினை கலைத்தபொழுது அவரின் “கடமை” உணர்ச்சி அப்பட்டமாக உலகிற்கே தெரிந்தது

ராமசந்திரன் காட்டிய “கண்ணியம்” என்ன என்பது அந்த கணபதி என்பவரை கேட்டால் தெரியும், கணபதிக்கும் விஎன் ஜாணகிக்கும் என்ன உறவு என்பது உலகம் அறியாததல்ல‌

அவர் காட்டிய கட்டுப்பாடு என்பது , என் அபிமான நடிகையினை இன்னொருவன் தொடகூடாது என்பதில் இருந்தது, அதுதான் அவருக்கு தெரிந்த “கட்டுப்பாடு”

அந்த ராமசந்திரனுக்கு தெரிந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அதுதான்

கலைஞருக்கு தெரிந்த கடமை, கண்ணிய, கட்டுப்பாடு என்பது வேறானது, அது அண்ணா கொடுத்தது

இப்படி யாரின் கொள்கை எது என தெரியாமலே அன்னார் சொல்லியிருக்கின்றார், பரிதாபம்

தன் கட்சிக்காரருக்கே அடி, உதை, பிடுங்கு என சொல்லிகொடுத்தவ‌ர் எம்ஜிஆர்

இன்னும் அக்கட்சி அடி, உதை, பிடுங்கு என்ற தத்துவத்தில்தான் இயங்குகின்றது என்பது யாருக்கு தெரியாது…

கலைஞருக்கு ராமசந்திரன் கற்றுகொடுத்தது எல்லாம், “செய்நன்றி கொல்வது” என்றால் என்ன? வளர்த்தவனுக்கு துரோகம் செய்வது என்றால் என்ன என்பதுதான், அது மட்டும்தான்


லகின் மிக பெரிய, அதி நவீனமான ஏவுகனையினை சோதித்தது ரஷ்யா, அந்த ஒரே ஒரு ஏவுகனையால் பிரான்ஸில் பாதியினையும், ஸ்பெயினின் முக்கால்வாசியினையும் அழிக்க முடியும், அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள் : செய்தி

அய்யய்யோ ஸ்பெயினா? வேண்டாம் வேண்டாம். குஷ்பூ இப்பொழுது ஸ்பெயினில் இருக்கின்றார், அவர் திரும்பி வந்தபின் இம்மாதிரி செய்திகள் வரட்டும்

அவர் வந்தபின் அந்த ஐரோப்பா இருந்தால் என்ன? போனால் என்ன?