கொடநாட்டினை தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம காட்சிகள் : செய்தி

கொடநாட்டினை தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம காட்சிகள் : செய்தி

பெரும் சொத்துக்களுக்கு சொந்தமான எந்த‌ பெரும் குடும்பமும் தங்களுக்குள் அடித்துகொண்டு செத்ததாகத்தான் வரலாறு சொல்கின்றது, பட்டினத்தார் வரலாறு அதற்கு பெரும் சாட்சி

கஷ்டபட்டு உழைத்தவர்களை விட, வெட்டியாக காலம் கழித்தவர்களுக்கு சொத்தின் மீதான வெறி அதிகமாவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

அரச குடும்பத்திலிருந்து, பெரும் பணக்கார குடும்பங்களில் அப்படித்தான் தங்களுக்குள் வெட்டிகொண்டு செத்திருக்கின்றார்கள் என்பது விதி

ஜெயலலிதா உடல் அருகே மன்னார்குடி கும்பல் சுற்றி நின்றபொழுதே “அந்த விதி” தள்ளிநின்று சிரித்ததை சிலர் கவனித்திருக்கலாம், அது வேலை செய்ய தொடங்கிற்று

இனி அவர்களே தங்களுக்குள் அடித்துகொண்டு சாகும் காலம் வந்துவிட்டது, பெரும் சொத்துக்கள் அதனைத்தான் செய்யும்

அக்கிரமகாரர்களுக்கு கொடுப்பதை கொடுத்துவிட்டு, அதனை கொண்டே அவர்களை அடிப்பது தர்மத்தின் விதி

மன்னார்குடி குடும்பமும் அதற்கு விதிவிலக்கு அல்ல, ஆகவும் முடியாது