திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன்

திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன்

இருவரும் ஜெயா அடக்கத்தின்பொழுது பேசிகொண்டிருக்கும் பொழுதே தெரிந்தது, இனி அடிக்கடி சந்திபார்கள் என‌

எம்ஜிஆருக்கு பின் ஜெயாவினை உருவாக்கியதில் இருவரின் பங்கும் பெரிது, பின் திருநாவுக்கரசு ஆட்களை ஒவ்வொருவராக வெளியே தள்ளி, கடைசியில் திருநாவுக்கரசையும் தள்ளி கட்சியினை கைபற்றினார் நடராசன்

திருநாவுக்கரசு தெருவுக்கு வந்து தனிகட்சி எல்லாம் தொடங்கி பின் பாஜக சென்றுவிட்டு இப்பொழுது காங்கிரசுக்கு வந்து தலைவரும் ஆகிவிட்டார்

இப்பொழுது இருவரும் சந்தித்துவிட்டார்களாம், இருவரும் ஒரு மாதிரி சிரித்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். ஆனாலும் தமிழக காங்கிரஸ் தலைவரான அவர், மிக சர்ச்சையான காலத்தில் சர்ச்சைகுரிய நடராஜனை சந்தித்திருப்பது வில்லங்கமானது

ஜெயா இல்லாத அதிமுகவிற்கு ஓட அவர் மனதில் திட்டமிருக்கலாம், அதிமுக அவரின் தாய்வீடு என்பது ஒன்றும் ரகசியமல்ல..

நிச்சயம் திருநாவுக்கரசு தமிழக காங்கிரசுக்கு மட்டுமல்ல, காங்கிரசுக்கே பொருத்தமற்றவர்.இந்த பிரச்சினை ஒருபுறம் ஓடிகொண்டிருக்கின்றது,

இன்னொருபுறம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை சத்தியமூர்த்தி பவனில் எப்படி கொண்டாடலாம் என சில காங்கிரசார் கொந்தளிக்கின்றார்கள்

இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து, திமுக எனும் கட்சியினை உடைத்து, தன்னை உருவாக்கிய கலைஞரின் நெஞ்சிலே மிதித்த, அதற்கு தீரா தலைவலியான், காங்கிரசின் கட்டளைக்கு இறுதிவரை கட்டப்பா போல விசுவாசமாக இருந்த அந்த அடிமை ராமசந்திரனுக்கு காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனில் நன்றி தெரிவிக்காமல் வேறு எங்கு தெரிவிப்பது?

அந்த டெல்லி அடிமையின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட சத்தியமூர்த்திபவனே மிக பொருத்தமான இடம் என்பது தமிழக அரசியல் புரிந்தோர்க்கு புரியாதா?


கொசுறு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிரட்டல், பாதுகாப்பு அதிகரிப்பு

நேற்று குஷ்பூ வீட்டினை மிரட்டினார்கள், இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிரட்டலாம்

ஆக தமிழகத்து முக்கியமான “கோயில்களுக்கு” மிரட்டல் என பொதுவாக சொல்லிவிடலாம்….