எந்த கொம்பனும் மறுத்துசொல்லமுடியாத உண்மை அது

தமிழன் இந்துக்கள் இல்லை என யாரும் சொல்லிவிடமுடியாது, தமிழ்கொடுத்த அகத்தியமுனிவனே சிவனடியார் என்றபின் சொல்ல என்ன இருக்கின்றது?

நிலங்களை பிரித்து நிலங்களுக்கொரு கடவுள் என அவர்கள் பெயரிட்டதிலேயே இந்துமதம்தான் நிற்கின்றது

தமிழர்கள் இந்துக்களாகத்தான் இருந்தார்கள், அவர்கள் சென்ற இடமெல்லாம் இந்துமதத்தினை பரப்பியிருக்கின்றார்கள், தமிழர் காலடி பட்ட இடமெல்லாம் இந்துமதம் பரவியிருக்கின்றது

கிழக்காசியா முழுக்க ராமயணம், மகாபாரத கண்ணகி கதைகள் பரவியிருப்பது அப்படித்தான், பல இந்து ஆலயங்கள் எழும்பியதும் அப்படித்தான்

தமிழனுக்கு மதம் இல்லை என்றால் கடல்கடந்த நாடுகளில் எல்லாம் சென்று ஏன் இந்துகோயில் கட்டபோகின்றான்?

பின் வந்த பிராமணர்களால் சில திரிபுகள் நடந்திருக்கலாம், சில தில்லாலங்கடி கதைகளை புகுத்தி அவர்கள் சில ஆதிக்கம் செய்திருக்கலாம், அதற்காக இந்துமதம் அவர்கள் கொண்டுவந்தது என்றாகிவிடாது

இங்கு இருந்த மதத்தோடு அவர்கள் இணைந்துகொண்டனர்

யூத மதத்தின் சில சம்பவங்களை இந்துமதத்தில் இணைத்தது அந்த பிரமாணர் வரவுக்கு பின்புதான்

ஆக தமிழர்களுக்கு மதம் இல்லை என்பதெல்லாம் சும்மா, ஆதியில் அவர்கள் இந்துக்கள் பின் பவுத்தம் சமணம் என சில காலம் இருந்தது பின் இஸ்லாம் கிறிஸ்தவம் என வந்தது, திராவிடம் என்றொரு மதமும் பின் வந்தது, தமிழம் என்றொரு மதத்தை சீமான் தொடங்கினார்

அகத்தியன் காலத்திலே சிவ வழிபாடும், சிலப்பதிகார காலத்திலே இசக்கி (இயக்கி), இந்திர வழிபாடும் இருந்திருக்கின்றது

எந்த கொம்பனும் மறுத்துசொல்லமுடியாத உண்மை அது

தமிழரின் தொடக்கமதம் இந்து என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது, அப்படி மறுத்தால் அவன் தமிழனாகவே இருக்க முடியாது