இது நம்ம நாடுங்க….

ஜூன் 3ல் தொண்டர்களை சந்திக்கின்றார் கலைஞர்

“நீர் இருக்கும்வரை தமிழகத்தில் நுழைய எந்த ஆரியகூட்ட‌ தலைவனும் அவன் கட்சியும்
இன்னும் பிறக்கவில்லை தலைவா”

# பேனா பிடித்த பாகுபலி..

Image may contain: 1 person, sunglasses and close-up

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு கர்ணன் எப்படி பதில் உத்தரவு பிறப்பிப்பாரோ? உச்சநீதிமன்றத்தையே கலைக்கின்றேன் என சொல்லி தொலைத்தால் என்னாகும்?

அவர்களுக்கு நல்ல நேரம் இருந்திருக்குமென்றால் சசிகலா வழக்கு, தினகரன் வழக்கெல்லாம் இவரிடம் வந்திருக்கும்,

அப்படி வந்திருந்தால் சிறைசென்ற நீதிபதி எங்களை சிறையிடுவதா? என உடைத்துகொண்டு இப்பொழுது வெளிவந்திருக்கலாம்


தினகரன் கைது விவகாரம்: பெண் நீதிபதிக்கு மிரட்டல்

சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்ல மேலும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது, ஆக தமிழக அரசுக்கு சங்கு ஊதும் நாள் நெருங்கி கொண்டிருக்கின்றது


மாட்டுத் தீவன முறைகேடு வழக்குகள்: லாலு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இப்பொழுதெல்லாம் உச்ச நீதிமன்றம் கடும் பிசி, சசிகலா வழக்கு முதல் லாலு வழக்குவரை கடும் பரபரப்பான தீர்ப்புகள், ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை மாதம் தீர்ப்பு இருக்குமாம்

இப்படி கடும் வேகமும் அதிரடியும் காட்டும் உச்ச நீதிமன்றம், அயோத்தி சர்ச்சை என்றால் மட்டும் சமாதனமாய் செல்லுங்கள் என சொல்லிவிட்டு கதவினை சாத்திகொள்ளும், குறைந்தபட்சம் அந்த குற்றவாளிகளை கூட தேடாது.. 


நக்சல்களை ஒடுக்க மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை அவசியம் : ராஜ்நாத்சிங்

அந்த ஒற்றுமை நக்சலைட்டுகளை ஒடுக்க மட்டுமல்ல, நதி நீர் பகிர்வு வரை அவசியம் என்பதை இவரிடம் தமிழிசை வலியுறுத்துவார் என நம்புவோம்.


திடீர் திடீரென விபத்து என்றும் தற்கொலை என்றும் நிகழும் மரணங்களை விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நிச்சயம் விசாரணை தேவை, அதில் அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷா தற்கொலைகளும் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்

அரசியல்வாதிகளுக்கு நண்பராய் இருப்பது எவ்வளவு ஆபத்து என்பது இம்மாதிரியான சாவுகளில் நன்றாக தெரிகின்றது,

அது “கூடா நட்பு”