லா நினோ எனும் குட்டி மகளே வருக‌! மழை வரம் தருக!!

கடும் வறட்சியில் தமிழகம் சிக்கி இருக்கும் காலத்தில், சில செய்திகள் வித்தியாசமாக வருகின்றன, முன்பே வானிலை அறிக்கைகள் சொன்னதுதான் இப்பொழுது காட்சியாகின்றது

அதாவது மழைபொழிவினை நிர்மானிப்பது கடலின் நீரோட்டோட்டங்கள், அவற்றின் சுழற்சியும் காற்றையும் பொருத்தே மழைபொழிவு இருக்கும்

கடலோட்டத்தில் வல்லுனர்களான‌ ஸ்பெயின் மாலுமிகள் இந்த நீரோட்டத்தை
அன்றே கணித்தனர், இந்த சுழற்சி இன்றும் அவர்கள் வைத்த பெயரிலே உலகெல்லாம் அழைக்கபடுகின்றது,

முன்பே வங்க கடலில் தமிழன் கண்டதுதான், அவனும் அப்படி சில பெயர்களை வைத்திருந்தான், செய்ததை தொடரதவன் தமிழன், அதனால் அவை மறைந்துவிட்டன‌

எல் நினோ, லா நினோ என கேள்விபட்டிருப்போம் அல்லவா? அதுதான் இப்பொழுது விஷயம், தமிழன் சொன்ன‌ அந்த நீரோட்டங்கள்தான், அது ஸ்பானிய பெயர்கள்தான், ஏன் அப்படி வநதது?

அதாவது எல் நினோ என்றால் அந்த நீரோட்டம் வறட்சியினை கொண்டு வரும், லா நினோ என்றால் அந்த நீரோட்டம் அடைமழையினை குளிரினை கொண்டுவரும் அட்லாண்டிக் கடலில் ஸ்பானியர் சொன்ன அந்த பெயர், இன்று உலகெல்லாம் எல்லா கடலிலும் அதே பெயரில் அழைக்கபடுகின்றது

எல் நினோ என்றால் ஸ்பெயின் மொழியில் குட்டி பையன் அல்லது குழந்தை இயேசு என பெயர். கிறிஸ்மஸை ஒட்டி அந்த வெப்ப நிகழ்வு நிகழுமாம், ஐரொப்பியருக்கு போதாதா? குட்டி பையன் என்றார்கள்

ஜூன் மாதங்களில் அடைமழை கடும் குளிர் தொடங்க செய்யும் நீரோட்டம் லா நினோ, அதாவது குட்டி மகள். சிலிர்க்கும் குளிரினை கொடுப்பது மகள் என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கின்றது

இப்பொழுது என்ன விஷயம் என்னவென்றால் இந்திய பகுதிக்கு, குறிப்பாக தென்பகுதிக்கு முன்பு எல் நினோ இருந்தது, அதனை தொடர்ந்துதான் இந்த வெப்பமும், வறட்சியும் ஏற்பட்டது , கடும் வறட்சியினை சந்தித்துகொண்டிருகின்றோம், இது முன்பே சொல்லபட்டடுதான்

சொட்டு தண்ணீருக்காக தமிழகம் தவமிருக்கும் இந்த வேளையில்தான் அந்த செய்தி வருகின்றது, நிச்சயம் நல்ல செய்தி

அதாவது லா நினோ தொடங்கிவிட்டது என அறிவிக்கபடுகின்றது, கிழக்காசிய நாடுகள் எல்லாம் பெருமழைக்கு தங்களை தயார்படுத்துகின்றன‌

மலேசியா பொதுவாக‌ பாஜகவினரில் ஏதாவது ஒருவர் தினம் அறிக்கை விட்டு கொண்டே இருப்பதை போல, மழை பொழியும் நாடு, இப்பொழுது அதன் வேகம் கொஞ்சம் கூடியிருக்கின்றது, அரசாங்கம் பெரு மழைக்கு எச்சரிக்கின்றது

தமிழகத்திற்கு இது நல்ல செய்தி, அந்த லா நினோ எனும் வருனனின் குட்டி மகளின் அருளில் தமிழகம் செழிக்கட்டும், எந்த கஷ்டத்தையும் கிராமங்கள் தாங்கும் , மழை இல்லாத கிராமங்கள் தெய்வம் இல்லா கோயில்கள்

லா நினோ எனும் குட்டி மகளே வருக‌, மழை வரம் தருக.