ஓவிய கடவுளின் உயிரற்ற ஓவியங்களுடன் , இறைவனின் உயிருள்ள ஓவியம்”


இத்தாலியில் வாழ்ந்த மிகசிறந்த ஓவியன் மைக்கேல் ஆஞ்சலோ, இன்றுவரை உலகம் கண்ட அற்புதமான ஒவியர்களில் அவர்தான் நம்பர் 1
இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியங்கள் எல்லாம் அவன் வரைந்து தள்ளியது, போப்பாண்டவர் வத்திக்கான், சின்ஸ்டைன் ஆலயங்களில் அவரை ஓவிய பொறுப்பாளரகவோ நியமித்திருந்தார்
கத்தோலிக்க ஆலயங்களில் காணும் தத்ரூப ஓவியங்கள் எல்லாம் அவரின் கைவண்ணமே, சிறந்த சிற்பியும் கூட. ஐரோப்பிய ஓவிய கலை அவர் காலத்தில் உச்சம் பெற்றது.
உலகமே கொண்டாடிய ஆஞ்சலோவிற்கு ஒரு மனகுறை இருந்தது, தன் திறமைக்கு ஏற்ற ஓவியத்தை தான் இன்னும் வரையவில்லை எனும் ஏக்கம் இருந்தது, அவனின் மிக சிறப்பான ஓவியங்களை கூட தன் முழு தகுதியினையும் வெளிபடுத்தாத குப்பை என கருதினான்
இறுதிவரை தன் மனம் நிறைவான ஓவியத்தை அவன் வரையவே இல்லை, ஏக்கத்துடனே இறந்தான். அவன் ஆன்மா சாந்தி அடைந்திருக்காது.
அந்த மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவிய கூடத்திற்கு குஷ்பூ சென்றிருக்கின்றர்.
அங்கு சுற்றிகொண்டிருக்கும் மைக்கேல் ஏஞ்சலோவின் ஆவி இப்பொழுது “இதோ நான் எதிர்பார்த்த ஓவியம், எனக்கடுத்து அழகிய ஓவியங்களை வரையும் ஆற்றல் இறைவனுக்கே இருந்திருக்கின்றது” என்ற கர்வத்துடன் இனி சாந்தியடையும்
“ஓவிய கடவுளின் உயிரற்ற ஓவியங்களுடன் , இறைவனின் உயிருள்ள ஓவியம்”