சிறு குறு செய்திகள் …..
இலங்கைக்கு மோடி செல்கின்றார், தேச பாதுகாப்பு மிக்க பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட செல்கின்றார்
சீமான், திருமா, திருமுருகன் கும்பலில் யாராவது இப்பொழுது கத்தட்டும் பார்க்கலாம்
காங்கிரஸ், கலைஞர், ரஜினி என்றால் குதிப்பதும், மோடி என்றால் அப்படியே நவதுவாரங்களை மூடி மோன நிலைக்கு செல்வதும் அவர்களுக்கு புதிதல்ல
மோடி செய்யபோகும் ஒப்பந்தங்களை எதிர்கட்டும் பார்க்கலாம், எதிர்த்தால் என்ன ஆகுமென்று இவர்களுக்கு தெரியாததல்ல, அதனால் மூச் காட்டமாட்டார்கள்
நீதிபதி கர்ணனை தேடுகின்றது போலீஸ்
ஆக ஒரு நீதிபதியே முன் ஜாமீன் வாங்க வழக்கறிஞரை தேடிகொண்டிருக்கின்றார்
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பது இதுதான்..
“நயன்தாரா அக்காவுக்கு ஃபேஷன் டிசைனராகணும்” மிஸ் கூவாகம் ஆண்ட்ரியா சென் விருப்பம
இது என்ன? பேஷன் டிசைன் , பியூட்டி பார்லர் கோர்ஸ், சமையல், கிளினிங், கார்டனிங், வாஷிங், டிரைவிங், பைலட் லைசன்ஸ், நாய் பராமரிப்பு, துப்பாக்கி சுடுதல், மலையாளம், பைபிள், இந்தி, தெலுங்கு, கன்னடம், பாடல், இசை, கவிதை , கேமரா நுட்பம்….
என எல்லா கலைகளும் கற்று நயந்தாராவின் ஆல் இன் ஆல் ஆக வலம் வர Babu Rao தயாராகி கொண்டிருக்கின்றார்,
அவர் நூலிழையில் தவறவிட்டால் அந்த வாய்ப்பினை சட்டென்று பறிக்கும் திட்டம் Chandran Kannan க்கு உள்ளது
அதனால் இந்த திருநங்கையின் கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை
குஜராத் மாநிலத்தவர் யாரேனும் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனரா? : அகிலேஷ் யாதவ்.
மகாத்மா காந்தி தற்கொலை செய்தாரா? வங்கபோர் நாயகன் பீல்டு மார்ஷல் மானெக்ஷா குஜராத்தில்தான் பிறந்தார்
நாட்டுபற்றுமிக்க குஜராத்தியர் இன்னும் ஏராளமானோர் உண்டு
நாட்டிற்காய் உயிர்கொடுத்த மக்களை பாராட்டவேண்டுமென்றால் பஞ்சாபியரை விட யார் கிடைப்பார்கள்? உபி ஆட்சியினை பஞ்சாபியரிடம் கொடுக்கலாமா?
குஜராத்தியரை விடுங்கள், இவர் நாட்டிற்காக என்ன தியாகம் செய்துவிட்டார்?
தேர்தலில் இவரை உபி மக்கள் ஏன் ஓடவிரட்டினார்கள் என்பது இப்பொழுது புரிகின்றது, கொஞ்சம் விவரமான மக்கள்தான் போலும்.
கலைஞரின் வைரவிழாவிற்கு யாரை அழைப்போம், யாரை அழைக்கமாட்டோம் என திமுக தரப்பில் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
கலைஞர் ஏதும் சொன்னதாக தெரியவில்லை, அவர் விழா ஏற்பாடுகளை செய்தால் இப்படி செய்யமாட்டார்
பாஜகவினை திமுக ஒதுக்குவது தெரிகின்றது, கலைஞர் ஏற்பாடுகளை செய்தால் எப்படி செய்வார் தெரியுமா?
“நாளையே அதிமுக ஆட்சி கலைந்தால், தேர்தல் வந்து திமுக ஆட்சியில் அமர்ந்தால் பாஜகவினை அனுசரித்து செல்லவேண்டும், ஆகவே அவர்களை தள்ளி வைக்க வேண்டாம்”
அதுதான் கலைஞர், அந்தந்த காலத்தில் செல்வாக்குள்ள தலைவர்கள் யாரையும் அவர் அணைக்க தயங்குவதில்லை, செல்வாக்கு இல்லாதவர்களை தள்ள தயங்குவதுமில்லை.
இவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டால், கலைஞரை தவிர எல்லோரும் அவரின் வைரவிழா ஏற்பாடுகளை செய்வது நன்றாக தெரிகின்றது…
ஏதோ சரியில்லாதது போல தெரிகின்றது, கலைஞரின் முழு ஒத்துழைப்பின்றி விழா நடந்தால், அது பெரும் மோசமான பின் விளைவுகளை கொடுக்கும் சாத்தியமும் உண்டு
வரலாற்றில் வெகுசிலரே கொடுத்து வைத்த ஜாம்பவான்கள், அவர்கள் போட்ட புள்ளியில் பிள்ளைகள் பல கிமீ பாய்ந்தன
மன்னம் பிலிப் மகன் அலெக்ஸாண்டர், ராஜராஜசோழன், செங்கிஸ்கானின் வம்சம், நேருவின் மகள் இந்திரா அவ்வகை
பிலிப்பிற்கும், ராஜராஜசோழனுக்கும் கிடைத்து போன்ற வாரிசுகள் கலைஞருக்கு கிடைக்காமல் போயிற்றேன்று நாளை வரலாறு நிச்சயம் பதியும் போல தெரிகின்றது
எவ்வளவு பெரும் அரசியல் குழப்பம் நடக்கின்றது, ஆனால் அந்த அரசியல்வாதிக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்லை, ஒரு அறிக்கையோ போராட்டமோ இல்லை
நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக்கை இப்பொழுதெல்லாம் பழைய படங்களில் மட்டுமே பார்க்கமுடிகின்றது, சரத்குமாராவது அடிக்கடி ஓட்டபந்தய செய்திகளிலாவது வருகின்றார்
இனி தேர்தல் வந்தால் மட்டுமே கார்த்திக்கை காண முடியும்
விவேகம் படத்தின் டீசர் வந்திருக்கின்றது
அஜீத்திற்கு விவேகமிருந்தால் அந்த சிவா எனும் டைரக்டரிடம் இருந்து தப்பி ஓடட்டும்
சிவாவும் அஜீத்தை மதிப்பதாக இருந்தால் , இத்தோடு அஜீத்தை விட்டு விடலாம்
செல்போன்கள் மூலம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – செங்கோட்டையன் பேட்டி
இப்படி செல்போன்மூலம் தேர்வுகளை அறிந்துகொள்ளத்தான் எல்ல்லோருக்கும் இலவச செல்போன் கொடுக்க அம்மா முடிவெடுத்தார் என கண்களை துடைத்து சொல்ல அமைச்சர் மறந்துவிட்டார்.
சரி, செல்பொனில் +2 தேர்வு எழுதும் அறிவிப்பு எப்பொழுது வரும்?
நீட் தேர்வு குறித்து இவர்கள் நிலைப்பாடு என்ன என கேட்டால் பதிலே இல்லை, இதில் போன் மூலம் ரிசல்ட்டாம்..
ஜெயலலிதா உயில் என்னிடம்தான் உள்ளது, சொத்துக்கள் எனக்கே சொந்தம் : ஜெயா அண்ணன் மகன் தீபக் பரபர தகவல்.
இவ்வளவு காலம் ஏன் வாய்திறக்கவில்லை?, ஜெயா ஆவி நேற்று இரவுதான் வந்து உயில் எழுதியது போல…