மலையக மக்களை பற்றி சொன்னால் …
மலையக மக்களை பற்றி சொன்னால் அப்படியா? அப்படி கொஞ்சம் தமிழர் உண்டா? என வியந்து கேட்கின்றார்கள்
இது கூட தெரியாமலா ஈழத்திற்கு கொடிபிடித்தார்கள் என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கின்றது
வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த சிக்கலை பட்டும் படாமலும் சொல்லி வந்தவர் கலைஞர், மலையக மக்களை நேசித்த பத்மநாபா போன்றவர்கள் மீது அன்றே அவருக்கு ஒரு அனுதாபம் இருந்தது
ஈழபோராட்டத்தில் இப்படி எல்லாபிரிவினையும் அவர் அழைத்து செய்த ஆலோசனைக்குத்தான் புலிகள் வர மறுத்தனர், ஆனால் எம்ஜிஆர் அழைத்தவுடன் ஓடினர்
எல்லா இலங்கை தமிழரையும் அணைத்த கலைஞரை புலிகள்தான் பிடிக்காமல் வெளியேறினரே தவிர, கலைஞர் யாரையும் வெறுக்கவில்லை, அவர் ஈழபிரச்சினையினை மலையக மக்களோடுதான் அணுகினார்.
ஈழபிரச்சினையினை எழுதிய சில இடங்களில் “தேயிலை கொழுந்தினை கிள்ள சென்ற எம் குல கொளுந்தினை கிள்ளும் லங்காபுரியே” எனும் இன்னோர் கவிஞனின் வரிகளையும் அவர் புகுத்திகொண்டுதான் இருந்தார்
உச்சமாக ஒருமுறை சொன்னார்
உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என 1990களில் கேட்கும் பொழுது சொன்னார், லாரா எனக்கு பிடிக்கும், தமிழராக முத்தையா முரளீதரனை பிடிக்கும்.
கலைஞர் அப்படி சொன்னதன் அர்த்தம் வெகு சிலருக்குத்தான் புரியும், அர்த்தமான வரிகள்
முத்தைய முரளீதரன் மலையக தமிழரின் வாரிசு, இன்றும் யாழ்பாணத்தாருக்கு அவர் “எஸ்டேட் தமிழன்” எனும் இரண்டாம் தர தமிழனே,
உலகமே கொண்டாடிய அந்த கிரிக்கெட் தமிழனை ஈழத்தவர் அவ்வளவாக நினைக்கமாட்டார்கள், நினைத்திருந்தால் அவருக்கான இடமே தனி
இலங்கையில் தமிழனாக தான் பாதிக்கடவில்லை என சொல்ல போக அவர் சிங்கள சார்பு எனும் சர்ச்சை வந்ததும் குறிப்பிடதக்கது..