மோடி இலங்கை சென்றுவிட்டார்….
மோடி இலங்கை சென்றுவிட்டார், இலங்கை விமான நிலையத்தில் மிக கடுமையான பாதுகாப்பிற்கிடையே அவரை இலங்கை பிரதமர் ரணில் வரவேற்றுள்ளார்
அங்கு குழந்தைகளும் மோடிக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர், மோடியும் கொஞ்சமும் இமேஜ் பாராமல் குனிந்து வணங்கியுள்ளார்
மோடியின் இந்த பணிவு உலகெல்லாம் புன்சிரிப்புடன் நோக்கபடுகின்றது, விரைவில் “நேரு மாமா” இடத்தை மோடி பிடிக்க திட்டம் இருக்குமோ என்னமோ?
கொழும்பு சந்திப்புகளை முடித்துகொண்டு நாளை மலையகம் செல்கின்றார் மோடி
கடும் பாதுகாப்புக்கிடையே மோடியினை எதிர்பார்த்து கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர் மலையகத்தார்
ராஜிவிற்கு இருந்த எதிர்ப்பினை போலவே மோடிக்கும் சில சலசலப்புகள் இருப்பதால் கடும் பாதுகாப்பு அளிக்கபட்டுள்ளது
சீனாவின் நீர்மூழ்கியினை இலங்கையில் அனுமதிக்க முடியாது என நேற்று இலங்கை சொல்லியிருப்பது மோடியின் வெற்றியாக நோக்கபடுகின்றது
ஏதோ அரசியல் புகை வருகின்றதா?
ஈழமக்களை வைத்து ஆடிய காங்கிரஸின் ஆட்டம் சில சறுக்கல்களை சந்தித்திருக்கலாம், அதற்கு புலிகளின் அடாவடியும், யாழ்பாண மேலாதிக்க சிந்தனையும் ஒரு காரணம்
பாஜக அரசு மிக தந்திரமாக மலையக தமிழர் பக்கம் இறங்கியிருக்கின்றது, எப்படியோ இப்படியாவது அம்மக்கள் வாழ்வில் வெளிச்சம் பரவட்டும்
துணிச்சல் மிகுந்தவர் வாஜ்பாய்: பொக்ரான் அணுகுண்டு சோதனை தினத்தையொட்டி மோடி பாராட்டு
1998ல் அணுகுண்டு வெடித்த வாஜ்பாய் துணிச்சலானவர் என்றால், பனிப்போர் காலத்தில் 1974ல் அணுகுண்டு வெடித்த இந்திரா எவ்வளவு துணிச்சலானவராக இருந்திருக்க வேண்டும்?
இந்தியாவிடம் அணுகுண்டு இருப்பது யாருக்கு தெரியாது? வாஜ்பாய் வெடிக்க போய், இதுதான் சாக்கு என பாகிஸ்தான் அடுத்த 4 நாட்களில் வெடித்தது
அவ்விஷயத்தில் வாஜ்பாய்க்கு நன்றி சொல்லவேண்டியது மோடி அல்ல, மாறாக பாகிஸ்தான்.