மலையகத்தில் தமிழில் பேசினார் மோடி..
இலங்கையில் புத்தர் கோவிலில் வணங்கினார், மலையகத்தில் தமிழில் பேசினார் மோடி
மலையகத்திற்கு இதுவரை சென்ற பிரபலங்களில் மகாத்மா காந்தி, மாவீரன் சேகுவாரா என இருவர்தான் இருந்தனர், அதாவது இரு அபூர்வ மனிதர்கள் அந்த அபலைகளை தேடி சென்றனர், சே நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு
மூன்றாவது மனிதர் மோடி, மிகவும் நல்லது
ஆனால் அங்கு தமிழில் பேசி தமிழ்வளர்க்க ஆசைபட்ட மோடி, தமிழகத்தில் இந்தியினை திணித்து தீர்வது என்ற முடிவோடு இருப்பதும், இங்கு மத நல்லிணக்கம் இருக்க கூடாது என நினைக்கும் சில சக்திகளை கண்டிக்காமல் இருப்பதும் விசித்திரம்
தமிழகத்தை தவிர உலகில் தமிழ் எங்கும் வளரட்டும், இந்தியாவினை தவிர உலகில் எங்கும் மத நல்லிணக்கம் இருக்கட்டும் என்பதுதான் மோடியின் வினோத கொள்கை போலும்..
இலங்கை இசை நிகழ்ச்சியினை இளையராஜா ரத்து செய்ய வேண்டும் : பெரியார் திராவிட கழகம் போராட்டம்
நேற்றுதான் பாரத பிரதமர் சென்று ராஜபக்சேயுடன் பேசிவிட்டு, யாழ்பாணம் பக்கம் செல்லாமலே வந்திருக்கின்றார்
விசாகபட்டினத்திலிருந்து விமான சேவை தொடங்கபடும் என்றும் அறிவித்திருக்கின்றார், இன்னும் பல திட்டங்களை அறிவித்திருக்கின்றார்
அதனை எல்லாம் பார்த்து வாயினை மூடிகொண்ட இவர்கள், இளையராஜாவினை எச்சரிக்கின்றார்களாம், கொஞ்சமேனும் வெட்கமோ , அறிவோ, மானமோ இல்லை போலும்
இவர்கள் அமைப்பிற்கு பெயர் அறிவும் ,மானமும் போதித்த பெரியாரின் பெயர்