கலைஞர் வைர விழா : அழைப்பு யார் யாருக்கு?
திருச்செந்தூர் கோவில் வைரவேலுக்காக நீதிகேட்டு தமிழமெங்கும் நடந்த தலைவனின் வைரவிழாவிற்கு பரூக் அப்துல்லா முதல் எல்லா தலைவர்களையும் அழைத்திருக்கின்றார்களாம்
அந்நாளில் ஈழபிரச்சினை டெசோவிற்காக கலைஞர் அழைத்ததும் ஓடிவந்த அகில இந்திய தலைவர்களில் பரூக் அப்துல்லா, பட்நாயக் என பெரும் வரிசை உண்டு, அவர்களை அழைப்பது வாழ்த்துகுரியது, ஆனால் ஒருவர் மிஸ்ஸிங்
அவர் வாஜ்பாய், அந்நாளில் இந்திராவினையும் ராஜிவினையும் எதிர்த்து கலைஞர் நின்ற காலங்களில் எல்லாம் அவருக்கு துணை இருந்தவர் வாஜ்பாய்
இனி ஈழதமிழரை தொட்டால் இந்தியா கொந்தளிக்கும் என கலைஞர் மதுரையில் டெசோ என முழங்கியபொழுது அதனை அருகிலிருந்து ஆமோதித்தவர் வாஜ்பாய்
கலைஞர் மேல் எப்பொழுதும் அவருக்கு ஒரு மரியாதை இருந்தது, கலைஞருக்கும் அவர்மீது ஒரு நல்ல அபிமானம் உண்டு
அந்த வாஜ்பாயினை அழைக்காதது கொஞ்சம் நெருடல்தான்..