உலகம் முழுவதும் இணைய தாக்குதல்

உலகம் முழுவதும் இணைய தாக்குதல் தீவிரமாகின்றது, இங்கிலாந்தில் தொடங்கிய தாக்குதல் உலகெல்லாம் பரவியிருக்கின்றது

இது விசித்திரமான தாக்குதல், பொதுவாக தகவல்களை திருட ஊடுருவுவார்கள் அல்லது குழப்ப ஊடுருவார்கள்

இம்முறை விசித்திரமான விஷயம், அதாவது கம்பியூட்டர்கள் முடக்கபட்டு இவ்வளவு பணம் கொடுங்கள் உங்களை அனுமதிக்கின்றோம் எனும் மிரட்டல், சில விஷயங்களுக்கு 300 டாலர் வரை கொடுத்து அமெரிக்காவில் கம்பியூட்டரை திறந்திருக்கின்றார்களாம்

திருடன் என்பவன் இனி கழுத்தில் கத்தி வைப்பவன் அல்ல, மாறிவிட்ட காலங்களில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கொள்ளையடிக்க தொடங்கிவிட்டான்

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் திருட்டும் , மிரட்டலும் கூடவே வளர்ப்பதுதான் மானிட குணம்