தேவ அன்னை மரியாள்
கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் தனி இடம் பெற்றிருப்பர் தேவ அன்னை மரியாள். இயேசுவின் வாழ்வில் தனி இடம் பெற்றிருந்தவர் மரியாள்
அவர் உலகில் பல இடங்களில் காட்சி கொடுத்திருந்தாலும், தனி இடம் பெற்ற இடங்கள் கொஞ்சம் உண்டு, அதிலொன்று போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரமும் ஒன்று
100 ஆண்டுகளுக்கு முன்பாக மே 13ம் தேதி, அந்த ஊரின் 3 சிறுவர்களுக்கு காட்சி அளித்தார் மரியாள், அக்காட்சிகள் தொடர்ந்தன, அக்டோபர் வரை தொடர்ந்தது
முதலில் அந்த சிறுவர்கள் சொன்னதை மக்கள் நம்பவில்லை என்பதால், ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் சில அதிசயங்களும் நடந்ததாகவும் சூரியன் குளிர்ந்ததாகவும், வித்தியாசமான ஒளிகளும், காட்சிகளும் விண்ணில் தெரிந்தததாகவும் செய்திதாள் செய்திகளே உண்டு
கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட இடங்களில் மாதா காட்சி கொடுத்திருந்தாலும் பாத்திமா காட்சி தனி இடம் பெற்றிருப்பது, மாதா சொன்ன தீர்க்க தரிசனம் தான்
3 விஷயங்களை அவர் சொன்னார் என்பார்கள்
முதலாவது 1917 வாக்கில் நடைபெற்ற முதலாம் உலகப்போர் தொடர்பான செய்திகள் , அப்போர் முடியும் அதனை விட பெரும் போர் பின்னால் தொடங்கும் என சொன்னார் என்பார்கள்
இரண்டாம் விஷயம் போப்பாண்டவருக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் ஏற்படும் ஆபத்துக்கள், கம்யூனிச ரஷ்யாவின் ஆதிக்கம், அச்சுறுத்தல் , போப் ஆண்டவர் சுடபடுதல் பொன்றவற்றை சொன்னார் , ரஷ்யா மனம் திரும்ப ஜெபிக்கவும் சொன்னார் என்பது
அப்படி பின்பு ரஷ்யர்கள் உலகை மிரட்டியதும், குருச்சேவ் போப்பாண்டவரை கொல்வோம் முடிந்தால் தடுங்கள் என சவால் விட்டதும், போப் சுடபட்டதும் பின் ரஷ்யா உடைந்ததும் நடந்தது
அப்படி முதல் இரு விஷயங்கள் நடந்தன
மூன்றாவது ரகசியம் இன்றுவரை தெளிவாக சொல்லபடவில்லை, பொதுவாக பாவவாழ்வு, ஜெபம், கிறிஸ்தவ அச்சுறுத்தல் என சொல்லபட்டாலும் உண்மையான செய்தி எது என இன்றுவரை தெரியாது, அது மறைக்கபட்டிருக்கின்றது, என்ன ரகசியம் அல்லது முன்னறிவிப்பு என யாரும் இதுவரை சொல்லவில்லை
கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இந்த காட்சி முக்கியமானது, அதுவும் போப்பாண்டவருக்கு மகா முக்கியமானது
கிட்டதட்ட 1300 ஆண்டுகள் உலகின் ஒப்பற்ற அதிகாரமிக்கவராக போப்பாண்டவர் விளங்கினார், அவர் வைத்ததே சட்டம் என்ற நிலை இருந்தது, மார்ட்டின் லுத்தர் திருச்சபையினை உடைத்தாலும் போப்பின் அதிகாரம் சரியவில்லை
போப்பாண்டவரின் சரிவினை முதலில் தொடங்கி வைத்தவன் நெப்போலியன், அதன் பின் போப்பாண்டவரால் ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்தமுடியவில்லை
உலகப்போர் அதற்கு பின்னே தொடங்கின, அவர் சொல்லுக்கு கட்டுபடாமல் நடந்தேறியது
இந்நிலையில் ரஷ்ய கம்யூனிசமும், போப்பாண்டவரை கொன்று கிறிஸ்தவத்தை வேரறுப்போம் என அவர்கள் செய்த அழிச்சாட்டியமும் போப்பின் நிலமையினை சீரியசாக்கின
நல்லவேளையாக அல்லூல்யா கோஷ்டிகள், பவர் பவர் எனும் காமெடி செய்யும் கிறிஸ்தவர்கள் எல்லாம் கத்தோலிக்கர் அல்ல, அப்படி இருந்திருந்தால் உலகம் தாங்காது, ஒப்பாரி வைத்தே உலகத்தை அழித்திருப்பார்கள்
அந்த இக்கட்டான காலத்தில்தான் மாதாவின் காட்சி ஆறுதலாக அமைந்தது, கிறிஸ்தவர்களுக்கு அது பெரும் நம்பிக்கையினை அளித்தது
பின் சோதனைகள் வந்தாலும் இன்றுவரை போப்பாண்டவர் அசைக்க முடியாத இடத்தில்தான் இருக்கின்றார், எனினும் சோதனையினை முன்னறிவித்த காட்சிகளாக இவை அமைந்தன
ஆனாலும் மாதா கம்யூனிச ரஷ்யா பற்றி சொல்லிவிட்டு, ஹிட்லரையோ, இஸ்ரேல் உதயத்தையோ பற்றி சொல்லாமல் போனது கொஞ்சம் ஆச்சரியம்தான்
அந்த காட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து உலகெல்லாம் கொண்டாட்டங்கள் நடக்கின்றன, இப்போதைய போப் போர்சுகலின் பாத்திமா நகருக்கே சென்று வழிபட்டிருக்கின்றார்
இந்நிலையில் பக்தர்கள் பக்தி பரவசத்தில் இருக்க, நாமும் வணங்கிவிட்டோம், அதன் பின்புதான் யோசிக்க வேண்டி இருக்கின்றது?
அந்த 3ம் ரகசியம் என்னவாக இருக்கும்? உலகம் பெரிதும் எதிர்பார்த்து சோர்ந்துவிட்ட கேள்வி அது, நமக்கு மட்டும் தெரிந்துவிடுமா என்ன?
மோடி அல்லது யோகி பற்றி ஏதும் சொல்லியிருக்கலாமோ???