போக்குவரத்து கழக ஸ்டிரைக்கினை முறியடிப்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து கழக ஸ்டிரைக்கினை முறியடிப்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
அட பரிதாபமே, இது தொழிலாளர் பிரச்சினை. பொதுவாக அவர்களுடன் பேசி தீர்ப்போம் என்பார்கள், பிரச்சினையினை சுமூகமாக முடிப்போம் என்பார்கள். இவரோ முறியடிப்போம் என் போர் முரசு கொட்டுகின்றார்.
பேருந்துகள்தான் நகரின் ரத்த ஓட்டம் , அவை இன்றி தமிழகம் இயங்காது, ஒரு மாதிரியான பக்கவாத நிலைக்கு தமிழகம் சென்றுவிடும், யதார்த்தம் அதுதான்
6 ஆண்டுகளாக இவர்கள்தான் ஆள்கின்றார்கள், இதில் கடந்த ஆட்சியின் பிழை என எதனை சொல்லமுடியும்? ஆக இது அதிமுக ஆட்சியின் பெரும் தோல்விகளில் ஒன்று, கிட்டதட்ட 6000 கோடி ரூபாயில் தீர்க்கவேண்டிய சிக்கல் இது, அந்த பணம் எங்கே???
எல்லா பேருந்துகளும் மக்கள் நெரிசலில்தான் நகர்கின்றன, எல்லா கண்டக்டர்களும் பிசியாகத்தான் இருக்கின்றார்கள், டீசல் விலைக்கேற்ப கட்டணங்களும் உயர்த்தியாயிற்று, இன்னும் நஷ்டம் என்றால் எப்படி?
இதுதான் குமாரசாமி கணக்கு..
திமுக அரசு போக்குவரத்தில் செய்திருக்கும் சாதனைகள் கொஞ்சமல்ல, கலைஞரின் சாதனை அது, மக்கள் நலனுக்காக அரசு பேருந்து, கிராமபுறங்களின் தனியார் மினி பேருந்து என அவரின் திட்டம் வாழ்த்துகுரியது
சென்னை மெட்ரோ ரயிலுக்கும் அவரே திட்டமிட்டார், இன்று ஓடும் மெட்ரோ ரயில் அவரின் கனவு. அந்த அளவிற்கு போக்குவரத்து வசதிகளில் அக்கறையாக இருந்தார்..
அவரை விரட்டிவிட்டுத்தான் இந்த அரசை மக்கள் வைத்து தொலைத்தார்கள், இன்று எல்லாவற்றையும் தொலைத்து நிற்கின்றார்கள்
இந்த அமைச்சரவையினை நினைத்தாலே பகீரென்கின்றது, நிதியமைச்சர் அம்மா சமாதியில் பட்ஜெட்டோடு நிற்கின்றார், பன்றி காய்ச்சல் பரவினால் ஒரு அமைச்சர் அப்படியா? பன்றி காய்ச்சல் மனிதருக்கு வருமா? இது வேறு காய்ச்சல் என காமெடி செய்கின்றார்
ஒருவர் வைகை அணையில் தெர்மாக்கோல் போட்டு விளையாடுகின்றார், இன்னொருவர் சென்னை சாலையில் பள்ளம் வந்தால் ஈரப்பதம் காரணமாக நிலம் அப்படி விரியும் என அவருக்கு அவரே நிபுணர் ஆகின்றார்
இன்னொரு அமைச்சர் 30 லட்சம் மிரட்டல் வழக்கில் தனக்கு தானே பேட்டிகொடுத்திருக்கின்றார், இங்கொருவர் போக்குவரத்து கழக பிரச்சினைக்கு போர் முரசு கொட்டுகின்றார்
எடப்பாடியிடம் நீங்கள்தான் முதலமைச்சர் என யாராவது நினைவுபடுத்தினால்தான் அவருக்கு அந்த பதவியில் இருப்பதே நினைவுக்கு வருகின்றது
ஒன்று மட்டும் புரிகின்றது, ஜெயா சாவில் மர்மம் ஏதும் இருக்கமுடியாது
இந்த அமைச்சர்களை வைத்து கொண்டு,இந்த கூட்டத்தை வைத்துகொண்டு, இவர்களை மேய்க்கும் மன்னார்குடி கும்பலை வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல், தலையில் அடித்துகொண்டே ஜெயலலிதா தற்கொலை செய்திருக்கலாம்
சசிகலா, பன்னீர் என எல்லோரும் மூடி மறைக்கும் மர்மம் அதுவாகவே இருக்கலாம், இவர்களை கட்டி மேய்க்கமுடியாமல் ஜெயா தற்கொலை செய்து செத்திருக்கலாம்..