முதல்வர் இனியும் கவுரவம் பார்க்கக்கூடாது : மு.க ஸ்டாலின்

முதல்வர் இனியும் கவுரவம் பார்க்கக்கூடாது : மு.க ஸ்டாலின்

அவர் என்றைக்கு அய்யா கவுரவம் பார்த்தார்? ஜெயாவிடம் அவர் படாத பாடா? கவுரவம் இருந்தால் அவர் அங்கு இருந்திருப்பாரா?

அவ்வளவு ஏன்? சசிகலா அதிகாரத்தில் பன்னீர் செல்வத்திற்கே ரோஷம் வந்த பின்னும் இவருக்கு வந்திருக்கின்றதா?

அவரிடம் போய் கவுரவம் அது இது என்றால் அவருக்கு புரியுமா? அப்படி என்றால் என்ன என்று கூட அவருக்கு தெரியாதே…

 

பின்னொரு நாளில் வரப்போகும் ஆட்சிக்காக ஸ்டாலின் காத்திருக்கின்றார்

ஆனால் இன்றைய அவலத்தை தீர்ப்பது யார்? என தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கின்றது

இதனை சொன்னால் நம்மை திமுக துரோகி என்பார்கள்..


தீப்பொறி ஆறுமுகத்தின் அதிரடி பேச்சுக்கள் சுவாரஸ்யமானவை,

அக்காலத்தில் தமிழ் பேசுவதற்கென்று சில இலக்கணம் இருந்தது, அப்பொழுது திக்கி திக்கி பேசி கிண்டலுக்கு இலக்கானவர் பழ.நெடுமாறன்

ரஜினியின் தமிழ் உலகறிந்தது, அஜித்குமாரின் தமிழ்போல ஒரு மாதிரியான தமிழ் அது

ஒரு மேடையில் தீப்பொறி ஆறுமுகம் சொன்னார், “எனக்கு ஒரு ஆசை, இந்த ரஜினிங்கிற பயலையும் இந்த திக்குவாய் பழ.நெடுமாறனையும் ஒரு பட்டிமன்றத்திலோ கவியரங்கிலோ பேசவைக்க வேண்டும்

கூட்டம் முடியும் வரை சிரித்துகொண்டே இருக்கலாம்”

இன்றும் ரஜினியும், பழ.நெடுமாறனும் பேசாமலே சிரிக்க வைத்துகொண்டுதான் இருக்கின்றார்கள்…